மேலும் அறிய

OBC Reservation: சமூக அநீதி; ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்துக - ராமதாஸ் வலியுறுத்தல்

நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிசி உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப் பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை 6 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிகவும் தாமதம் என்றாலும், இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

இந்தியாவில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் கூட  பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையான மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த சமூக அநீதி குறித்து பல ஆண்டுகளாகவே பா.ம.க. உள்ளிட்ட  கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில், அது பற்றி ஆய்வு செய்யவும், உள் ஒதுக்கீடு பற்றி பரிந்துரைப்பதற்காகவும் 02.10.2017 அன்று நீதிபதி ரோகிணி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதங்களில், அதாவது 2018-ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்குள் ஆணையம் அறிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6 ஆண்டுகள் தாமதம்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூகநீதி கிடைக்க வேண்டுமானால், அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் தீர்வு ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தான் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு 6 ஆண்டுகள் தாமதமாகி விட்ட நிலையில், இனியும் தாமதிக்காமல், பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதுதான் சமூக நீதியாக அமையும். ஓபிசி உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் ஓபிசி வகுப்பினருக்கு செய்யப்படும் சமூக அநீதியாகவே பார்க்கப்படும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில்  உள் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் தேவையையும், அவசரத்தையும் வலியுறுத்துவதற்காக சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஓபிசி வகுப்பில் மொத்தம் 2633 சாதிகள் உள்ளன. அவர்களில் 983 சாதிகளுக்கு, அதாவது 37.33 விழுக்காட்டினருக்கு  ஓபிசி இட ஒதுக்கீட்டால் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அதேபோல், மேலும் 994 சாதிகளுக்கு, அதாவது 37.75 விழுக்காட்டினருக்கு 2.66% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளில்  75 விழுக்காடான  1977 சாதிகளுக்கு 2.66% இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இது மிகக்கொடிய சமூக அநீதியாகும்.

சமூக அநீதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு?

அதேநேரத்தில், மற்றொருபுறம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 10 சாதிகள் மட்டுமே, அப்பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன.  அதாவது, ஓபிசி வகுப்பில் 5.60 விழுக்காடு சாதிகள், 75.02 விழுக்காடு பயன்களை அனுபவிக்கின்றன. இத்தகைய சமூக அநீதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது சமூகநீதிக்கும் பொருந்தும். மத்திய அரசின் வேலை  வாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களால் இன்னும் 12 விழுக்காடு பிரதிநிதித்துவத்தைக் கூட எட்ட முடியவில்லை. அதற்கு காரணம் ஏற்கனவே, அரசு வேலைவாய்ப்புகளை அனுபவித்து வரும் சமூகங்கள், தங்களுக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, வேலைவாய்ப்புகளை விட்டுத் தர மறுப்பதுதான். ஓபிசி உள் இட ஒதுக்கீட்டிலும் இதே சூழல் தொடரும். எந்த அளவுக்கு விரைவாக உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அந்த அளவுக்குதான் பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு சமூகநீதி கிடைக்கும்.

இந்த உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, தற்போது மத்திய சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதன் மூலம், அதன் விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து, அதனடிப்படையில் ஓபிசி உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை அடுத்தக் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
பெயர், கொடியை பயன்படுத்தாத; நடைபயணம் வேண்டாம்: அன்புமணியை எச்சரிக்கும் ராமதாஸ்
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
சனாதன தர்மத்தை காப்பாற்றினாரா பவன் கல்யாண் ? 'ஹரிஹர வீர மல்லு ' படம் எப்டி இருக்கு. விமர்சனம் இதோ
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: 28ம் தேதி - நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
Hondas New Hybrid SUV: நச்சுன்னு 3 புதிய ஹைப்ரிட் கார்கள், 3 வருடங்களுக்கு ஸ்கெட்ச் - மீண்டு வர ஹோண்டா திட்டம்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
சமூகத்தின் இருண்ட பக்கத்தை பேசுகிறது மாரீசன்...புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
New Vice President: புதிய குடியரசு துணை தலைவர் யார்? போட்டியாளர்கள் இதை செஞ்சா தான்.. பாஜக டிமேண்ட்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: விடாது கருப்பாய் கொட்டும் மழை, இன்று எங்கெல்லாம் ரெட் அலெர்ட் - சென்னை வானிலை நிலவரம்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Rishabh Pant: ரிஷப் பண்டிற்கு என்ன ஆச்சு..! வீங்கிய வலது கால் பாதம், சீரிஸ் கதை முடிஞ்சதா? பிசிசிஐ அப்டேட்
Embed widget