மேலும் அறிய

அதிரவைக்கும் பாலியல் குற்றங்கள்.. தமிழ்நாட்டை உலுக்கும் இந்த பயங்கரங்களுக்கு என்ன தீர்வு?

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தி தாளை திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை.. அட என்னப்பா இது என சினிமாக்களில் வசனம் இடம்பெற்றுள்ளதை கேட்டிருப்போம்.  ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெளி வரும் செய்திகள் இந்த வசனத்தை ஒத்து அமைந்துள்ளன.

கடந்த 21ம் தேதி விருதுநகரில் ஓராண்டு காலமாக நடைப்பெற்று வந்த பாலியல் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. காதலன் போன்று நடித்து ஏமாற்றி, இளம் பெண்ணுடம் தனிமையில் இருக்கும் போது அதை வீடியோவாக பதிவு செய்து, மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவதாக மிரட்டி அந்த இளம் பெண்ணை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். திமுக நிர்வாகிகள் இருவர், சிறார் நான்கு பேர் உட்பட் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அதே வாரத்தில் அதற்கு அடுத்த நாள், மேலும் ஒரு திடுகிடும் சம்பவம் வெளியானது. தனது நண்பருடன் சினிமா படம் பார்க்க இரவு காட்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணையும், அவருடைய நண்பரையும் ஷேர் ஆட்டோ என ஏமாற்றி கடத்திய ஐந்து பேர் பாலாற்று கரையோரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பரித்துள்ளனர். பணத்தை பங்கிட்டு கொள்வதில் மது போதையில் ஏற்ப்பட்ட தகராறில், அவர்கள் பொது வெளியில் உளர இந்த சம்பவம் வெளிசத்திற்கு வந்து, குற்ற செயலை செய்த இரண்டு சிறார்கள் உட்பட் ஐந்து நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே வாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியை சுற்றிப்பார்க்க சென்ற காதல் ஜோடியை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்த கும்பல் ஒன்று, காதலன் கண்முன்னேயே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பத்மேஸ்வரன், தினேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்ய காவல்துறை முற்பட்ட போது ஏற்பட்ட மோதலில், காவலர்களை அவர்கள் வெட்டிய சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு முந்தைய வாரத்தில் திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை பகுதியில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கைது செய்யப்பட்டார். அதே போல விருதுநகரில் பள்ளி மாணவியை மிரட்டி திமுக நிர்வாகி வீரணன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான் கடலூரில் தன் காதலனுடன் நின்று பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை காதலன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்..

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக-வை சேர்ந்தவர்கள் சிலரே குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதால் அவர்களை கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் முக்கிய வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனேனினும் அடுத்தடுத்த வாரத்தில் தொடர்ந்து இது போன்று வெளிவந்து கொண்டிருக்கும் இது போன்ற செய்திகள் தமிழக மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Embed widget