மேலும் அறிய

தமிழ்நாடு, ஒன்றியம்.. தொடங்கியது சீமானா? : எரிமலை பிழம்புக்கு சொந்தம் கொண்டாடும் இரட்டை மெழுகுவர்த்தி!

’தமிழ்நாடு, ஒன்றியம் எனத் தொடங்கியதே நான்தானே’ எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார் சீமான். புதிதாகத் தலைமையேற்ற தமிழ்நாடு அரசு திரும்பிய பக்கமெல்லாம் ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டு வருவதையொட்டி அவரது இந்தக் கருத்து இருந்தது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அசைக்கமுடியாத ஆளுமைகளை தமிழ் மக்களுக்குத் தந்த தமிழ் சினிமா பின்னாளில் தமிழ்நாட்டுக்குச் சில விநோத அரசியல் சக்திகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தானும் அரசியல் செய்கிறேன் எனக் களமிறங்கிய செவாலியர் தொடங்கி, கருப்பு எம்.ஜி.ஆர் ஆன கேப்டன் விஜயகாந்த், எதை மாற்றமுடியவில்லை என்றாலும் கட்சிப் பெயரையாவது அவ்வப்போது மாற்றும் லட்சிய டி.ராஜேந்தர், கட்சிக்குள்ளேயே அறிக்கைகளை ஏவிக்கொண்டிருக்கும் மய்யம் கமலஹாசன்வரை இந்த விநோதங்களுக்குப் பஞ்சமில்லை.


தமிழ்நாடு, ஒன்றியம்.. தொடங்கியது சீமானா? : எரிமலை பிழம்புக்கு சொந்தம் கொண்டாடும் இரட்டை மெழுகுவர்த்தி!

இவர்கள் வரிசையில்தான் சீமான். சிறுவயது தொடங்கியே திராவிட இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். நடிகர் இயக்குநர் எனப் பலமுகங்கள் இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கான இவரது நெருப்புக்குரல்தான் இவரது அடையாளம்.’சீமான் வந்திருக்கு’ எனக் கருணாநிதியே மகிழ்ச்சியுறும் அளவுக்கு கோபாலபுரத்து வீட்டில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகாமிட்டவர். 2009-ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சம் இந்தப் பாசத்துக்குச் சோதனைக்காலமானது.  நாம் தமிழர் கட்சியும் உருவானது. திராவிட இயக்கப் பாசம் தமிழ்த்தேசியப் பாசமாக மருவி, தற்போது அந்தத் தமிழ்த்தேசியமே தாம்தான் எனச் சீமானைச் சொல்ல வைத்திருக்கிறது.

’தமிழ்நாடு, ஒன்றியம் எனத் தொடங்கியதே நான்தானே’ எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார் சீமான். புதிதாகத் தலைமையேற்ற தமிழ்நாடு அரசு திரும்பிய பக்கமெல்லாம் ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டு வருவதையொட்டி அவரது இந்தக் கருத்து இருந்தது.

சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி ஒலித்து வரும் ஒன்றியக்குரலைச் சீமான் தன்குரலாகக் குறிப்பிடுவது ஏன்? ஈ.வே.ராமசாமியை தன் குலசாமி எனக் குறிப்பிட்டுப் பேசிய சீமான் குலசாமியின் வாக்கையே மறந்தாரா? 1947-களுக்குப் பிறகான ம.பொ.சி.யின்  மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறந்தாரா? அல்லது பெரியார் வழி வந்த பேரறிஞர் அண்ணா தனது கட்சியின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ எனக் குறிப்பிட்டதை மறந்தாரா?


தமிழ்நாடு, ஒன்றியம்.. தொடங்கியது சீமானா? : எரிமலை பிழம்புக்கு சொந்தம் கொண்டாடும் இரட்டை மெழுகுவர்த்தி!
தமிழ்நாடு என்பதும் ஒன்றியம் என்பதும் இனவாரி, மொழிவாரி ஆட்சிக்கோரும் குமரிக்கண்டத்தவர்களின் நெடுங்கால உரிமைக்குரல். பெரியார் ‘குடி அரசு’ கொண்டுவந்தததும் அதன் பொருட்டுதான். தேசம் தேசியம் என்பதிலிருந்து சுயமாக தன்னை அரசாக அறிவித்துக் கொள்வது அதிகாரமல்ல அது குடிமையை மையப்படுத்தியது என்றார். குடிமையை மையப்படுத்திதான் தமிழ்நாடு முன்மொழியப்பட்டது.


தமிழ்நாடு, ஒன்றியம்.. தொடங்கியது சீமானா? : எரிமலை பிழம்புக்கு சொந்தம் கொண்டாடும் இரட்டை மெழுகுவர்த்தி!

1963-இல் நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணாவோ, சட்டம் சார்ந்த அதிகாரமானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்குமிடையே பிரித்துத் தரப்பட்டுள்ளது’ என்றார்.


தமிழ்நாடு, ஒன்றியம்.. தொடங்கியது சீமானா? : எரிமலை பிழம்புக்கு சொந்தம் கொண்டாடும் இரட்டை மெழுகுவர்த்தி!

’கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத்தரவேண்டும்’ என முதலமைச்சர் அண்ணா தன் தம்பிக்கு 1969-ஆம் ஆண்டில் இறுதியாக கடிதமொன்றை எழுதினார். அண்ணாவின் சொல்கேட்ட தம்பியாக அவர் மறைந்த சில மாதங்களுக்குள்ளேயே மாநில சுய அதிகாரத்தை ஆய்வு செய்வதற்கென ராஜமன்னார் கமிட்டியை நிறுவினார் கருணாநிதி. அயலுறவு, ராணுவம், மத்திய வங்கிகள் தவிர மற்ற அதிகாரத்தை மாநிலங்களுக்குத் தரவேண்டும் என்றது அந்தக் குழு. தீர்மானம் நிறைவேற்றி ஒன்றியத்துக்குப் அனுப்பப்பட்ட பரிந்துரை ஓரமாய் போடப்பட்டது.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த காலமெல்லாம் இந்த சுயாட்சிக் கோரிக்கைகளும் தொடர்ந்து வலுத்து வந்தன. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’ஒன்றியம்’ எனச் சொல்வது இந்த நெடுங்காலக் குரல்களின் நீட்சி. ஆளுங்கட்சியானாலும் எதிர்கட்சியானாலும் சுயாட்சி என்பது பேரறிஞர் அண்ணா வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தார்மீகக் கொள்கை. அது பெரியார் பற்றவைத்த தீ!. எரிமலைப் பிழம்பை பற்றவைத்தது நான்தான் என இரட்டை மெழுகுவர்த்திகள் சொந்தம் கொண்டாடுவது முழுப் பூசணியை மறைக்கும் அபத்தம். இது சீமான் பேச்சுக்கும் பொருந்தும்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget