ADMK BJP Alliance: பாஜக பார்த்த வேலை ”அதிமுக அழியப்போகிறது, கூட்டணி இல்லை” அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADMK BJP Alliance: அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாகம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

ADMK BJP Alliance: பாஜக உடன் கூட்டணி வைத்த எந்த கட்சியுடனும் இணைந்து பணியாற்ற மாட்டோம் என எஸ்டிபிஐ அறிவித்துள்ளது.
பாஜக மீது சரமாரி குற்றச்சாட்டு:
பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டம் என, எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அறிவித்துள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், “ தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது? அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள்.
அழிந்து போகும் மாநில கட்சிகள்:
நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில் அதிமுகவை கபிலிகரம் செய்திருக்கிறார்கள். பாஜகவை பொறுத்த வரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு. எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை.
”அதிமுக அழியும்”
பாஜகவுடன் கூட்டணி வைத்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பாஜக தவம் கிடந்தார்கள். இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும். பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது” என எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
திமுக உடன் சந்திப்பு:
கடந்த வாரம் அதிமுக உடனான கூட்டணி தொடர்பான அறீப்பை அமித் ஷா வெளியிட்ட அதேநாளில், எஸ்டிபிஐ கட்சியினர் அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், ,உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காகவு நன்ரி தெரிவிக்கவே இந்த சந்திப்பு என எஸ்டிபிஐ கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, ”பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. கூட்டணியில் இணைவோம்” என எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது. இதனால்,திமுக உடன் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினர் ஓட்டுகள் மொத்தமும் திமுக பக்கம் சாய்வது, அதிமுக-பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.






















