மேலும் அறிய

சாட்டை துரைமுருகன் மீது மூன்றாவது வழக்கு, 15 நாள் சிறைக்காவல்!

ஏற்கெனவே மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், கூடுதலாக 15 நாட்கள் சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

சாட்டை யூட்யூப் சேனல் நடத்தி வந்த துரைமுருகன் மீது மூன்றாவதாக ஒரு வழக்கு தற்போது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதன்பெயரில் திருவிடைமருதூர் நீதிமன்றம் துரைமுருகனை பதினைந்து நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே துரைமுருகன் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, திருச்சி கே.கே.நகரில் கார் பராமரிப்புக் கடை வைத்திருந்த வினோத் என்பவருடன் தகராறு செய்ததில் சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இதில் சரவணன், சந்தோஷ் விநோத் உட்பட துரைமுருகன் கூட்டாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சாட்டை துரைமுருகனால் சிறையிலேயே இருந்தார். இதற்கிடையே மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், கூடுதலாக 15 நாட்கள் சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

தொழிலதிபர் சிவசங்கர், ”சிவசங்கர் பாபா” ஆனது எப்படி?

துரைமுருகன் கைது பின்னணி என்ன? 

திருச்சியில் ’சமர் கார் ஸ்பா என்ற’ பெயரில் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் வினோத் என்பவர் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி, சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரது கடைக்கே சென்று, பிரபாகரன் குறித்த பதிவிற்காக வினோத்தை மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வினோத்தின் கடை மூடப்பட்டுவிட்டதாகவும், அவர் மனநலம் சரியில்லாதவர்கள் என்றும் நாம் தமிழர் கட்சியினர் பலர் தங்களது ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினர்.
சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவதூறாக பேசிய திருச்சி சமர் கார் ஸ்பா நிறுவனத்தை சார்ந்த வினோத் என்பவர் புரிதல் பிழையால் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்டதை அடுத்து அவருக்கு அறிவுரை கூறி விடை பெற்றோம் என பதிவிட்டு’, வினோத் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாம் தமிழர் கட்சியினருக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் ஒருவரை போலீசார் முன்னிலையிலேயே மிரட்டி வீடியோ எடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது ? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கையை காவல்துறையும் அரசும்தான் எடுக்க வேண்டும், தண்டனை கொடுக்க இவர்கள் யார் ? என திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் சாட்டை முருகனுக்கு எதிராக அடுத்தடுத்து ட்வீட்களை தட்டி சாட்டையை சுழற்றியபடியே இருந்தனர்.

வினோத்தை மிரட்டி, வீடியோ எடுத்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது ஆளுங்கட்சியாக இருந்தும் கூட, நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது என உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரையெல்லாம் டாக் செய்து அவர்கள் பதிவிட்டவண்ணமே இருந்தனர்.

இந்நிலையில் வினோத்தும் திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அதில் ‘தன் கடைக்கு வந்த சாட்டை துரைமுருகன், சரவணன் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளில் தன்னை தொலைபேசி மூலம் அழைத்து திட்டியதாகவும், பின்னர் கடைக்கு சென்றபோது கொலைவெறியுடன் தாக்க முயன்றதாகவும், தான் தப்பிச் செல்லாமல் அங்கிருந்தால் நிச்சயம் அவர்கள் தன்னை கொலை செய்திருப்பார்கள் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்’.

இப்படி திமுகவினர், தலைமை மீது அதிருப்தி தெரிவித்து போஸ்ட் போட்டுக்கொண்டிருந்த நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியினர், இது குறித்து  விசாரிக்கத் தொடங்கி, சாட்டை துரைமுருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர். அதன்பிறகுதான், சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட 4 பேரையும் இரவில் கைது செய்தது திருச்சி கே.கே.நகர் காவல்துறை. இந்த நான்கு பேர் மீதும் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் (143 ,447, 294(b), 506(2), 147 of IPC) வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget