மேலும் அறிய

கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு முருங்கை நாற்றங்களிலும் 5000 முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 50 முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பரமத்தி ஊராட்சி, செம்மண்டம் பாளையம், தென்னிலை ஊராட்சி, கூடலூர் ஊராட்சி ரங்கப்பாளையம் கிராமம், சின்ன தாராபுரம் ஊராட்சி பகுதியில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பயணம் மேற்கொண்டு செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்கள்.

கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றியம் பரமத்தி கிராமம் இந்திரா நகர் பகுதியில் ரூ.21.96 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கருடாம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்கும் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் நுண்ணீர் உரம் தயாரித்தல் குறித்தும், தொடர்ந்து சாமியாத்தால் பழனிச்சாமி நாச்சிமுத்து நகர் பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளை கேட்டறிந்தார்.

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

அதே பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பாரத மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளையும், தென்னிலை ஊராட்சி பகுதியில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சத்துணவு மையம் கட்டிடத்தினையும், கூடலூர் ஊராட்சி ரெங்கப்பாளையம் கிராமத்தில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு பணிகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

 

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

பின்னர் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலை தெற்கு அரசு தொடக்கப் பள்ளியில்  மாணவ, மாணவியர்களுடன் பாடங்கள் குறித்து கேட்டறிந்து மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நோட்டு மற்றும் பேனாக்களை பரிசாக வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபுசங்கர் கலந்துரையாடினார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்கள், ஊராட்சி இடங்கள், குளக்கரைகள் ஆகிய இடங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் பருவமழை காலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக சரக்கொன்னை, தூங்கு மூஞ்சி, புங்கன், வேம்பு, முருங்கை, பழ வகைகளில் பெருநெல்லி, பொய்யா, மாதுளை மற்றும் சீதாப்பழம் உள்ளிட்ட பல்வேறு மர வகைகளை உற்பத்தி செய்திடும் வகையில் ரூ .6.86 லட்சம் மதிப்பீட்டில் 10000 மரக்கன்றுகளை உருவாக்கிட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது.

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

மேலும், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு வழங்கும் வகையில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு முருங்கை நாற்றங்களிலும் 5000 முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 50 முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு தோட்டக்கலை நாற்றங்கால்களிலும் 5000 பலவகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 22 தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு சிறு குறு விவசாயிகளுக்கு பல வகை மரக்கன்றுகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
திருமுடிவாக்கத்தில் தென்னரசு அதிரடி விசிட்! கலெக்டருடன் நேரில் சென்றதன் பின்னணி என்ன?
திருமுடிவாக்கத்தில் தென்னரசு அதிரடி விசிட்! கலெக்டருடன் நேரில் சென்றதன் பின்னணி என்ன?
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
ரூ.1 லட்சம் சம்பளம், பர்சனல் செகரட்டரி வேலை! நம்பி வந்த கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கடலூர் தொழிலதிபர் அதிரடி கைது!
உஷார் புதுச்சேரி! தரம் குறைந்த 2 மாத்திரைகளுக்கு அதிரடி தடை - உங்க வீட்டிலேயும் இந்த மருந்து இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க!
உஷார் புதுச்சேரி! தரம் குறைந்த 2 மாத்திரைகளுக்கு அதிரடி தடை - உங்க வீட்டிலேயும் இந்த மருந்து இருக்கான்னு உடனே செக் பண்ணுங்க!

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget