மேலும் அறிய

சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார்

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் உள்பட ஐந்து பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையராக கடந்த மே மாதம் சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அண்மையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவருக்கு சென்னை மாநகர காவல்துறையினர் பூங்கொடுத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கர் ஜிவால் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி ரேங்க்கில் இருந்த அவர் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர், சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர் ஜிவாலுடன் மேலும் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபியாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.


சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார்

அவர்களின் விவரம் வருமாறு:

வீட்டுவசதி கழகத்தின் ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இனி அத்துறையில் டிஜிபியாக செயல்படுவார்.

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை ஏடிஜிபியாக உள்ள அப்பாஸ் குமார், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அவர் அத்துறையின் டிஜிபியாக செயல்படுவார்.

உளவுத்துறை ஏடிஜிபி டி.வி.ரவிச்சந்திரன் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஏடிஜிபி மகேஷ் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஏடிஜிபியாகவும், ஐஜி கபில் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஐஜியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினித் தேவ் வான்கடே காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமரேஷ் புஜாரி, சென்னை சைபர் க்ரைம் பிரிவின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜி.வெங்கடரமணன், சென்னை போலீஸ் தலைமையகத்தின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

காவல்துறை நிர்வாகம் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் கே.சங்கர்.

அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் ஏதும் வழங்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவரான சங்கர் ஜிவால், திமுக ஆட்சி அமைந்த பின்னர் சென்னை காவல்துறை ஆணையாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.  அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட இறையன்பு ஐஏஎஸ் தான் திமுக ஆட்சி அமைந்தவுடன் தலைமைச் செயலராக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தலைப்பு செய்திகள்

”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 
Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான கூல் நியூஸ்!
Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான கூல் நியூஸ்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget