மேலும் அறிய

சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார்

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் உள்பட ஐந்து பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையராக கடந்த மே மாதம் சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அண்மையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவருக்கு சென்னை மாநகர காவல்துறையினர் பூங்கொடுத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கர் ஜிவால் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி ரேங்க்கில் இருந்த அவர் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர், சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர் ஜிவாலுடன் மேலும் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபியாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.


சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார்

அவர்களின் விவரம் வருமாறு:

வீட்டுவசதி கழகத்தின் ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இனி அத்துறையில் டிஜிபியாக செயல்படுவார்.

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை ஏடிஜிபியாக உள்ள அப்பாஸ் குமார், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அவர் அத்துறையின் டிஜிபியாக செயல்படுவார்.

உளவுத்துறை ஏடிஜிபி டி.வி.ரவிச்சந்திரன் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஏடிஜிபி மகேஷ் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஏடிஜிபியாகவும், ஐஜி கபில் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஐஜியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினித் தேவ் வான்கடே காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமரேஷ் புஜாரி, சென்னை சைபர் க்ரைம் பிரிவின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜி.வெங்கடரமணன், சென்னை போலீஸ் தலைமையகத்தின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

காவல்துறை நிர்வாகம் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் கே.சங்கர்.

அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் ஏதும் வழங்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவரான சங்கர் ஜிவால், திமுக ஆட்சி அமைந்த பின்னர் சென்னை காவல்துறை ஆணையாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.  அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட இறையன்பு ஐஏஎஸ் தான் திமுக ஆட்சி அமைந்தவுடன் தலைமைச் செயலராக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!
CM Vijay: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget