மேலும் அறிய

சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார்

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் உள்பட ஐந்து பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையராக கடந்த மே மாதம் சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அண்மையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவருக்கு சென்னை மாநகர காவல்துறையினர் பூங்கொடுத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கர் ஜிவால் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி ரேங்க்கில் இருந்த அவர் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர், சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர் ஜிவாலுடன் மேலும் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபியாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.


சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார்

அவர்களின் விவரம் வருமாறு:

வீட்டுவசதி கழகத்தின் ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இனி அத்துறையில் டிஜிபியாக செயல்படுவார்.

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை ஏடிஜிபியாக உள்ள அப்பாஸ் குமார், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அவர் அத்துறையின் டிஜிபியாக செயல்படுவார்.

உளவுத்துறை ஏடிஜிபி டி.வி.ரவிச்சந்திரன் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஏடிஜிபி மகேஷ் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஏடிஜிபியாகவும், ஐஜி கபில் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஐஜியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினித் தேவ் வான்கடே காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமரேஷ் புஜாரி, சென்னை சைபர் க்ரைம் பிரிவின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜி.வெங்கடரமணன், சென்னை போலீஸ் தலைமையகத்தின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

காவல்துறை நிர்வாகம் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் கே.சங்கர்.

அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் ஏதும் வழங்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவரான சங்கர் ஜிவால், திமுக ஆட்சி அமைந்த பின்னர் சென்னை காவல்துறை ஆணையாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.  அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட இறையன்பு ஐஏஎஸ் தான் திமுக ஆட்சி அமைந்தவுடன் தலைமைச் செயலராக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Fathers Day History: இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
Salem Leopard: திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
Embed widget