மேலும் அறிய

Salem: மனஅழுத்தம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஏடிஜிபி அருண்

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் ஆலோசனை.

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சேலம் சரக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் இன்றைய தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இது மட்டுமில்லாமல் 4 மாவட்ட துணை ஆணையாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து காவல் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதற்கு முன்பாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஏடிஜிபி காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து கோவையில் உயிரிழந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு மலர் தொகை மரியாதை செலுத்தினர்.

Salem: மனஅழுத்தம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஏடிஜிபி அருண்

பின்னர், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சேலம் சரகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மன அழுத்தத்தை குறைப்பது குறித்து அதிகாரிகளிடம் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் ஆலோசனை வழங்கினார். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏதாவது தேவைகள், குறைகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முறையாக தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வு காணப்படும் என்பது குறித்தும் அதிகாரிகளும் எடுத்துரைத்தார். மேலும் காவல்துறையில் பணியாற்றி வரும் அனைத்து காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பது பற்றி உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளார். மேலும் சேலம் சரகத்தில் சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? விற்பனை செய்தவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் மற்றும் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்து வருகிறார். மேலும் கஞ்சா விற்பனை எந்த அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget