மேலும் அறிய

கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு - ஒரே நாளில் முடிவடைந்த ஒரு வார டோக்கன் விநியோகம்

கோவையில் நாள் ஒன்றுக்கு ரெம்டெசிவிர் 500 வயால் மட்டுமே வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படும் நிலையில், இந்த ஒதுக்கீடு போதாது.

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை, கோவையில் கடந்த  8 ம் தேதி துவங்கியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வயால் ரெம்டெசிவிர் ஆயிரத்து 568 ரூபாய்க்கும், 6 வயால் ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்படுகிறது.

ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விற்பனை துவங்கிய முதல் நாளில் 500 வயால் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டு இருந்தாலும், மருந்து வாங்க வந்த 63 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு மருந்து விநியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதிகாலை 6 மணிக்கே டோக்கன் பெற்றவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மருந்து வாங்க குவிந்தனர். நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகரித்தது. 500 க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றனர். இதனிடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்தும் கல்லூரிக்குள் அனுமதிக்காததால் கல்லூரிக்கு முன்பாக காத்திருந்த பொதுமக்கள் கோவை அவிநாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல் துறையினர் சமரசப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர்.


கோவையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு - ஒரே நாளில் முடிவடைந்த ஒரு வார டோக்கன் விநியோகம்

இந்நிலையில் நேற்று ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு முடிவடைந்ததால், காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் வருகின்ற 15 ம் தேதி வரை ஒரு வாரத்திற்கான ரெம்டெசிவிர் டோக்கன் விநியோக்கப்பட்டுள்ளது. 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று மருந்து விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி 17 ம் தேதி மருந்து வழங்கப்படும் எனவும், இதற்கான டோக்கன் 16 ம் தேதி கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு கோவை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு ஒட்டப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் வழங்கப்படும் என்பதால், கல்லூரி முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரே நாளில் ஒரு வாரத்திற்கான டோக்கன் முடிவடைந்து இருப்பதால், அவசர தேவையாக மருந்து தேவைப்படுவோர் செய்வதறியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ரெம்டெசிவிர் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “கோவையில் நாள் ஒன்றுக்கு ரெம்டெசிவிர் 500 வயால் மட்டுமே வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படும் நிலையில், இந்த ஒதுக்கீடு போதாது. சிலர் மருந்தை வாங்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க கூடுதல் மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
“விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லை... எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் எங்கிருந்து வந்தது?” — உதயநிதி கேள்வி
“விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லை... எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் எங்கிருந்து வந்தது?” — உதயநிதி கேள்வி
35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
35 வயதுக்குள் இருந்தால் போதும்! ரூ.30,000 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய வரலாறு: தற்காலிக சபாநாயகர் தலைமையில் நாளை பட்ஜெட்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய வரலாறு: தற்காலிக சபாநாயகர் தலைமையில் நாளை பட்ஜெட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Embed widget