மேலும் அறிய

'5 நாள் கழிச்சுவான்னு சொன்னா உயிருக்கு யார் பொறுப்பு' - சேலத்தில் ரெம்டெசிவிர் இருப்பின் நிலவரம் என்ன?

மருந்து கிடைக்க நான்கு ஐந்து நாட்கள் ஆகும் என்றால் அதுவரை நோயாளிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம் தருவா என்று சேலத்தில் மக்கள் சிலர் ரெம்டெசிவிர் கிடைக்காததல் கடும் சோகத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளின் வாசலில் ரெம்டெசிவிர் மருந்துக்காகக் கையேந்தி நிற்கிறார்கள் பொதுமக்கள். வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர், ஒருவாரமாக வரிசையில் நிற்பவர், அடுத்த வேளையே தனது உறவினருக்கு ரெம்டெசிவிர் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவர் என வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு கண்ணீர்க்கதை. இதற்கெல்லாம் பதிலாக ஃபார்மா பாய்ண்டுகள் ‘இன்று போய் நாளை வா’ எனக் கைவிரிக்கின்றன. இந்தச் சூழலில் சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்கும் மக்களின் பதிவுகள் இவை..

"8-ஆம் தேதி என்னுடைய தந்தைக்காக ரெம்டெசிவிர் வாங்க வந்தேன். அப்போது கிடைக்கவில்லை 12-ஆம் தேதி இன்று தான் எனக்கு மருந்து கிடைத்தது. கிட்டதட்ட மூன்று நாட்களாக இதற்காக கூட்டத்தில் நின்றேன்"என ஒருவர் நம்மிடம் கூறுகிறார். மற்றொருவர், "நான் தருமபுரி அருகே உள்ள கிராமத்திலிருந்து வருகிறேன். என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய சிடி ஸ்கேன் சரியாக இல்லை என்பதால் எனக்கு 3 மருந்துகள் மட்டுமே தந்தனர்" எனக் கூறி அழுகிறார். 

"கடந்த சனிக்கிழமை மருந்து வாங்க வந்தேன். ஞாயிற்றுகிழமை வரும்படி கூறினார்கள். ஞாயிற்றுகிழமை வந்தேன். அப்போது வெறும் டோக்கன் மட்டும் கொடுத்தனர். மீண்டும் திங்கட்கிழமை வந்தேன். அப்போது என்னுடைய டோக்கன் நம்பர் 78 என்பதால் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறையினர் வந்து டோக்கன் படி அல்ல யார் முன்னே செல்கிறீர்களோ அவர்களுக்கு மருந்து என்றனர். அதற்குபின் எல்லோரும் கூட்டமாக நின்றனர். அப்போது நான் 140-ஆவது ஆளாக இருந்தேன். அப்போது சமூக இடைவெளி உள்ளிட்ட எதுவும் இங்கு கடைபிடிக்கப்படவில்லை" என விரக்தியுடன் ஒருவர் கூறினார்.

 

"நான் திங்கட்கிழமை வந்தேன் 12-ஆம் தேதி இன்று தான் எனக்கு டோக்கன் கொடுத்துள்ளார்கள். என்னுடைய உறவினருக்கு நாளைக்குள் ரெம்டெசிவிர் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இங்கு இன்னும் மருந்து கிடைக்கவில்லை. ஒருநாளைக்கு 50 பேருக்கு தான் மருந்து தருகிறார்கள். இங்கேயே இல்லை என்கிறார்கள். ஆனால் வெளியே மட்டும் இந்த மருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. மருந்து கிடைக்க நான்கு ஐந்து நாட்கள் ஆகும் என்றால் அதுவரை நோயாளிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம் தருவா" என ஆவசேத்துடன் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

மேலும் நோயாளிகளின் அவசரத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி பல வகை விவரங்களை கேட்டு தாமதப்படுத்தப்படுகின்றது என்றும் சிலர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Embed widget