மேலும் அறிய

1 மணி நேரத்தில் இலங்கை போகலாம்! 118 கோடி திட்டம் ; முழுவிவரம் உள்ளே

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக திட்டமிடப்பட்டு 118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு.

Rameswaram-Talaimannar Shipping: ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க, தமிழக சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக திட்டமிடப்பட்டு உள்ளது. 118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக புதிய கடல் பாலம் கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான கப்பல் போக்குவரத்து 1914ம் ஆண்டு துவங்கப்பட்டது. 50 ஆண்டு நடைபெற்று வந்த கடல் போக்குவரத்து 1964ல் வீசிய கோரப்புயலில் தனுஷ்கோடி நிலைகுலைந்ததால் நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து, இலங்கை உள்நாட்டு போர் காரணமாக சில ஆண்டுகளில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது

மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க இரு நாடுகளும் பல்வேறு முயற்சிகள்

மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க இரு நாடுகளும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், கடந்த 2023, அக். 14ல் நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவங்க மத்திய அரசு திட்டமிட்டது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முன்னாள் துணைத்தலைவர், தலைமைச் செயல் அலுவலர் வள்ளலார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர்‌, ராமேஸ்வரம் தீவின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கப்பல் சேவை மற்றும் சுற்றுலா படகு சவாரி இயங்குவதற்கு பொருத்தமான அக்னி தீர்த்தக் கடற்கரை, தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம், பாம்பன் குந்துகால் துறைமுகம் உள்ளிட்ட இடங்தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து புதிய ஜெட்டி பாலம் கட்டுவதற்கு ஐஐடி குழு சார்பில் கடலுக்குள் மணல் ஆய்வு செய்யப்பட்டது.

கடலுக்குள் மூழ்கிய தனுஷ்கோடி

தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இருந்தது. கடந்த 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது. ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து, இலங்கை போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. அதன்பின், கப்பல் போக்குவரத்து துவக்கப்படவில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பலில் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட முடியும். அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்ல, ரயில் வசதி உள்ளது.

118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை

இதனால், விமானப் பயணச் செலவு பெருமளவு குறையும். எனவே, ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க, தமிழக சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, 118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட பணிகள் துவங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசு வாயிலாக பணிகள் நடைபெறுகிறது

இது குறித்து, மாநில சிறு துறைமுகங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது., தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க, ராமேஸ்வரம், தலைமன்னார் துறைமுகங்களை சீரமைக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசு வாயிலாக பணிகள் நடந்து வருகிறது. தலைமன்னார் துறைமுகத்தை அம்மாநில அரசு இன்னும் மேம்படுத்தவில்லை. இதனால், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. மேலும், மத்திய அரசு வாயிலாக இத்திட்டத்தை சாகர்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, திட்ட மதிப்பீடு தயாரித்தும், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார்.

தலைப்பு செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய்; லஞ்சம் வாங்கியதாக புகாரில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு - அடுத்து என்ன நடக்கும்?
ஆட்டத்தை தொடங்கிய முதல்வர் விஜய்; லஞ்சம் வாங்கியதாக புகாரில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு - அடுத்து என்ன நடக்கும்?
மிகக் கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் - மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?
மிகக் கனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 4 மாவட்டங்களு ஆரஞ்சு அலர்ட் - மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
ரூ.1,000 டூ ரூ.2,500: புதுச்சேரி மகளிருக்கு ஜாக்பாட்! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி...
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!
69% இட ஒதுக்கீடு அச்சுறுத்தல்:... தமிழகத்தில் சாதிவாரி சர்வே அவசியம்: பாமக அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானம்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget