மேலும் அறிய

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற சட்டம் இயற்றவேண்டும் - ராமதாஸ்..!

அகில இந்திய மருத்துவ தொகுப்பில் .பி.சி. இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலே சட்டம் இயற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

“மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விட, அதை தாமதப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. இது சிறிதும் நியாயமற்றதாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில்,‘‘மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டுக்கான இடங்களைப் பொறுத்தவரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனாலும், இது குறித்த முடிவை, உச்சநீதிமன்றத்தில் சலோனிகுமார் வழக்கில் தெரிவித்து விட்டு, அதன் பிறகு தான் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற சட்டம் இயற்றவேண்டும் - ராமதாஸ்..!

அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், ‘‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம். இது குறித்து முடிவெடுக்க ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரைப்படி அடுத்த கல்வியாண்டு முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கலாம்” என்று ஆணையிட்டிருந்தது.

அதன்படி அமைக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி  அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்தாண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரிடம் தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமானது தான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘‘தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளவாறு 50% அல்லது தேசிய அளவில் உள்ளவாறு 27% என எந்த அளவில் வேண்டுமானாலும் இட ஒதுக்கீடு வழங்கலாம்; ஆனால், அதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; அகில இந்திய தொகுப்பில் பொதுப்பிரிவினருக்கான ஒதுக்கீடு குறையாத வகையில், எத்தனை விழுக்காடு ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்ற அளவில் மொத்த இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்’’ என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு நினைத்திருந்தால் இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு  எப்போதோ ஓபிசி வகுப்புக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதை மத்திய அரசு செய்யவில்லை.


மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற சட்டம் இயற்றவேண்டும் - ராமதாஸ்..!

இத்தகைய சூழலில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை இது தொடர்பாக அணுகுவது தேவையற்ற சிக்கலையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தும். அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டால் சலோனிகுமார் வழக்கே இல்லாமல் போய்விடும். அது தான் சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது நீதியாக இருக்காது.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இன்னும் மறுக்கப்படுவது நியாயமற்றது. எனவே, எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கான சட்டம் வரும் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடப்புக் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Breaking News LIVE, July 6: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரிப்பு
Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
Samantha : விமர்சனங்களை ஒதுக்கி பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் சமந்தா..மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
TVK Vijay: ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கொந்தளித்த த.வெ.க., தலைவர் விஜய் - ”சமரசமின்றி சட்ட-ஒழுங்கை நிலை நாட்டிடுக”
12 years of Naan Ee :  ஈ விஸ்வரூபம் எடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று
12 years of Naan Ee : ஈ விஸ்வரூபம் எடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Rahul Gandhi: காப்பீடு ஓகே,  இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
காப்பீடு ஓகே, இழப்பீடு எங்க? அக்னிவீர் திட்டத்தின் மீது ராகுல் காந்தி அட்டாக் - பதில் சொல்லுமா ராணுவம்?
Embed widget