மேலும் அறிய

புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார் பேரறிவாளன்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பின் ஜாமீன் கிடைத்த நிலையில், பேரறிவாளன் இன்று புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் மகிழ்ச்சி பொங்க வெளியில் வந்தார். அவரை ஆனந்தக்கண்ணீருடன் அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் ததும்ப வரவேற்றார்.  

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் மகிழ்ச்சி பொங்க வெளியில் வந்தார். அவரை ஆனந்தக்கண்ணீருடன் அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் ததும்ப வரவேற்றார்.  


புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார் பேரறிவாளன்..!

முன்னதாக, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணை வந்தது. அப்போது, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் 1991ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனுக்கு இந்த 32 ஆண்டுகாலத்தில் ஜாமீன் வழங்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.

இதற்கு முன்னதாக, பேரறிவாளனுக்கு அவரது தந்தையின் உடல்நிலையால் அவரை நேரில் பார்ப்பதற்கு, பேரறிவாளனின் சிறுநீரக பிரச்சினைக்காக அறுவை சிகிச்சைக்கு உள்ளிட்ட சில காரணங்களுக்கு தமிழக அரசால் பல முறை பரோல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சிறையில் 32 ஆண்டுகளாக வாடிவரும் பேரறிவாளன், சாந்தனு, நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.


புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார் பேரறிவாளன்..!

இந்த சூழலில்தான் பேரறிவாளன் தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் இன்று வெளியில் வந்துள்ளார். அவரை கண்ட அவரது தாயார் அற்புதம்மாள் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 32 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஜாமீனிவ் வெளியே வந்த பேரறிவாளன் தனது தாயை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

பேரறிவாளனுக்கு தற்போது  வழங்கப்பட்டுள்ள ஜாமீனில் வழக்கமான நிபந்தனைகளே நியமிக்கப்பட்டுள்ளன. அவர் ஜோலார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் மாதத்திற்கு ஒருமுறை நேரில் சென்று கையெழுத்திட்டாலே போதும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இது வழக்கமான நிபந்தனை என்று அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறையில் உள்ள மற்ற 6 பேருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி இன்று கைதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி இன்று கைதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget