மேலும் அறிய

“பல ஆசைகள் இருக்கு... இதையெல்லாம் செய்யணும்..” - லிஸ்ட் போட்ட நளினி!

கணவருடன் சேர்ந்து இங்கிலாந்து சென்று மகளை பார்க்க விரும்புவதாக, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தது தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.  32  ஆண்டுகளாக  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில்,  கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

சிறப்பு முகாமில் தங்க வைப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும்,  தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், பேரறிவாளனுக்கு அளித்த தீர்ப்பே, மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதனடிப்படையில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன். அவர்களில், முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நளினி செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நளினி, தங்களது விடுதலைக்காக உறுதுணையாக இருந்த மத்திய, மாநில அரசுகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்த பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். தனக்காக போராடியவர்கள் அனைவரையும் சந்திக்க முடியுமா என தெரியவில்லை என்றும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி கூறினார். தமிழக அரசு பரோல் வழங்கியதன் காரணமாகவே, விடுதலைக்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

முதல் நாள் முதலே நம்பிக்கையுடன் இருந்தேன் - நளினி

கைதான நாள் முதலே நான் விடுதலை ஆகிவிடுவேன் என நம்பியதாகவும், ஆனால் தனது முயற்சிகளுக்கு தொடர்ந்து பல அடிகள் விழுந்ததன் காரணமாக, வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற பல சூழல்களை சிறையில் தான் எதிர்கொண்டதாகவும் கூறினார். ஆனாலும், வழக்கறிஞர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்ததால் வழக்கில் தொடர்ந்து போராட முடிந்ததாக கூறினார். 

தனக்கு தூக்கு தண்டனை ரத்து ஆன நேரத்தை காட்டிலும், ராபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானபோது தான் மிகவும்  மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழரான தனது கணவர் முருகனுக்கு உலகின் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும்,  அதில் ஏதேனும் ஒரு நாட்டில் அவர் குடியேறுவார் என்றும் நளினி கூறினார். அவசர விசா மூலம் கணவர் முருகன் உடன் சேர்ந்து லண்டன் சென்று மகளை சந்திக்க விரும்புவதாகவும், முகாமில் உள்ள தனது கணவரை விரைவில் தன்னுடன் விரைந்து சேர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

கணவருடன் சேர்ந்து மகளை சந்திக்க விருப்பம் - நளினி

சிறையில் இருந்தாலும் மனதளவில் தனது மகள் மற்றும் கணவருடன் இருந்ததாகவும், அவர்களுடன் வாழ்ந்த மாதிரியான அந்த அனுபவம் இனி உண்மையில் நடக்கப்போவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும் என்பது போன்ற பல ஆசைகள் இருப்பதாகவும், ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்தால் அவரை சந்திக்க தயார் எனவும் நளினி தெரிவித்தார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget