மேலும் அறிய

Rajiv Case Nalini: "சோனியாவோ, ராகுல்காந்தியோ என்னைச் சந்திக்க வாய்ப்பில்லை.." சிறையில் இருந்து விடுதலையான நளினி..!

சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ தன்னைச் சந்திப்பார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என சிறையில் இருந்து விடுதலையான நளினி பேசியுள்ளார்.

”காலம் கடந்துவிட்டது, சோனியாகாந்தியின் குடும்பம் என்னைச் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றே கருதுகிறேன்” என கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலையான நளினி தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் சோனியா காந்தி குடும்பத்தினர் அன்பானவரை இழந்து விட்டார்கள் என்றும் தன் கவலையைப் பகிர்ந்துள்ளார்.

ராஜீவ்காந்தி மரணம் :

அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய விவகாரத்தில்,  ஈழத்தமிழர்கள், சிங்களப்படைகளின் சீற்றறத்தை விட அமைதிப்படையிடமிருந்து இரண்டு மடங்காக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் இலங்கை அரசின் மீது இருந்த ஆவேசம், மடைமாற்றமாகி, குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மீது திரும்பியது. 1991ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே, ஸ்ரீபெரும்புதூரில் , நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்  ராஜீவ்காந்தி கலந்து கொண்டார் அதைப் பயன்படுத்தி தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். 

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகித்த காவல் துறையினர், பின்னர் ஒருவழியாக உறுதிக்கு வந்தது. இச்சம்பவத்தில் நேரடியாக பங்கேற்றவர்களை சுட்டுக் கொல்ல முடிந்ததே தவிர உயிரோடு பிடிக்க இயலவில்லை.

ஆனால் அதற்கு  பலியானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பேரறிவாளன், நளினி, முருகன் ரவிச்சந்திரன் என பலர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசே அவர்களை விடுவிக்க பல சட்டப் போராட்டங்களை கையில் எடுத்தது. ஆனால், அவை அனைத்தும் விசாரணை அமைப்புகள், அதிகார எல்லையைக் காரணம்காட்டி தட்டிக் கழிக்கப்பட்டன.

6 பேர் விடுதலை :

19 வயதில் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் என்ற இளைஞர், ஆயுட்காலத்தின் பாதி வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. அவரது தாயார் அற்புதம்மாள் எடுத்த முயற்சி தோல்விகளையே சந்தித்து வந்தாலும், இறுதியில் ஏதோ ஒரு வழியில் வெற்றிவாகை சூடியது.

அதன் தொடர்ச்சியாக ஆளுநரே மறைமுகமாக எதிர்ப்பை பதிவு செய்திருந்தாலும், இதுதான் எங்கள் முடிவு என்பதை நீதிமன்றம் உறுதி செய்து விட்டது. பேர்ரறிவாளன் நீங்களாக எஞ்சிய ஆறு பேரையும் விடுவித்துள்ளது. 

நளினி ஆறுதல் :

இந்நிலையில், விடுதலையான சிலமணி நேரங்களுக்குள், மறைந்த ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் நளினி. ”அன்பானவரை அவர்கள் (சோனியா, பிரியங்கா,ராகுல்காந்தி) இழந்துவிட்டார்கள். சோகம், துக்கம் அவர்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்கள் அந்த துக்கத்திலும் சோகத்திலும் இருந்து ஒருநாள் மீண்டு வருவார்கள்” என்றார்.

தொடர்ந்து சோனியா காந்தி குடும்பத்தை சந்திப்பது குறித்துப் பேசிய நளினி, சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ தன்னைச் சந்திப்பார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என்றார். அதற்கான காலம் கடந்துவிட்டதாகவும் நளினி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget