![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Rajendra Balaji: கை நிறைய கயிறு.. அடையாளம் வைத்த போலீஸ்.! அலர்ட்டான ராஜேந்திர பாலாஜி.. நடந்தது என்ன?
கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தன்னை யாரும் அடையாளம் காணாமல் இருக்க, கையில் இருந்த பெரும்பாலான கயிறுகளை அகற்றியுள்ளார்.
![Rajendra Balaji: கை நிறைய கயிறு.. அடையாளம் வைத்த போலீஸ்.! அலர்ட்டான ராஜேந்திர பாலாஜி.. நடந்தது என்ன? Rajendra Balaji identity wearing lot ropes arms removed, so that no one identified him right hand wore gold bracelet says police Rajendra Balaji: கை நிறைய கயிறு.. அடையாளம் வைத்த போலீஸ்.! அலர்ட்டான ராஜேந்திர பாலாஜி.. நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/06/b3355a13126ecbfcdac25833b942c654_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி(Rajendra Balaji) நேற்று கர்நாடக மாநிலம் ஹாசனில் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை உட்படுத்தப்பட்டநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திரபாலாஜியை வருகிற 20 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட இருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதனிடையே, தன்னுடைய அடையாளமாக போலீசார் தெரிவித்ததில், கை நிறைய கயிறு அணிந்திருப்பார் என்றும் தெரிவித்திருந்தனர். இதனால் தன்னை யாரும் அடையாளம் காணாமல் இருக்க, கையில் இருந்த பெரும்பாலான கயிறுகளை அகற்றிய ராஜேந்திரபாலாஜி, ஒரே ஒரு சிவப்பு நிற கயிறை மட்டும் கட்டியிருந்தார். அதே வலது கையில் தங்க காப்பு ஒன்றும், விரல்களில் மோதிரங்களும் அணிந்திருந்தார்.
'முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சேஸ் செய்து தூக்கிய போலீஸ்’ கர்நாடாகவில் கைது செய்யப்பட்டார்..!#Rajendrabalaji | pic.twitter.com/Q48pVRKl6R
— Raja Shanmugasundaram (@SRajaJourno) January 5, 2022
முன்னதாக, அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீதிமன்ற காவலுக்கு பிறகு ராஜேந்திரபாலாஜியை காவலுக்கு எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)