மேலும் அறிய

Rahul Gandhi-Vijay: கரூர் சம்பவம்; விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராகுல் காந்தி - என்ன பேசினார்.?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தவெக தலைவர் விஜய்யுடன் தொலைபேசிய வாயிலாக பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவர் என்ன பேசினார்.? பார்க்கலாம்.

கடந்த சனிக்கிழமையன்று, கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

விஜய்யிடம் என்ன பேசினார் ராகுல்.?

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்யை நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.

அப்போது, கரூரில் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றியும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இருவரும், சுமார் 15 நிமிடங்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவமும், தற்போதை வரையிலான நிலவரமும்

கடந்த சனிக்கிழமை இரவு, கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

அப்போது, கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரி, தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு, சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார் விஜய். அப்போதிலிருந்து அவர் வெளியே வராமல் இருந்த நிலையில், சுமார் 34 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார் விஜய். பலத்த பாதுகாப்புடன் சென்ற அவர், எங்கு சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே, கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், 2-வது நாளாக இன்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்! வெற்றி பெறுமா அன்புமணியின் திட்டம்?
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Embed widget