மேலும் அறிய

Puzhal Lake: புழல் ஏரி கரையில் அபாயமா? களத்திற்கே சென்ற அமைச்சர்கள்! நீர்வளத்துறை கொடுத்த நீண்ட விளக்கம்!

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும் மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும் மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் புழல் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

புழல் ஏரி கரை உடையும் அபாயத்தில் உள்ளதாக இன்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்து, திருவள்ளூர்,கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வளத் துறை செயற்பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும் மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நீர்வளத் துறை செயற்பொறியாளர் கூறி உள்ளதாவது:

’’புழல்‌ ஏரியானது சென்னை மாநகர குடிநீர்‌ தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும்‌ மிக முக்கியமான ஏரியாகும்‌. இந்த ஏரியானது திருவள்ளூர்‌ மாவட்டம்‌, மாதவரம்‌ ஒன்றியத்தில்‌ அமைந்துள்ளது. இந்த ஏரியின்‌ நீர்‌பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர்‌ ஆகும்‌. இந்த ஏரியின்‌ முழ உயரம்‌ 2120 அடியாகும்‌. இந்த ஏரியின்‌ முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும்‌. ஏரியின்‌ கரையின்‌ நீளம்‌ 7090 மீட்டர்‌ ஆகும்‌.

இன்றைய (07.12.2023) காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர்‌ இருப்பு உள்ளது. ஏரியின்‌ கொள்ளளவு 3002 மி.க. அடியாக உள்ளது. மேலும்‌இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல்‌ ஏரியின்‌ நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி விதம்‌ உபரி நீர்‌ வெளியேற்றப்பட்டு வருகிறது.

கன மழையால் கூடுதல் நீர் வரத்து

கடந்த சில நாட்களாக மிக்ஜாம்‌ புயலினால்‌ அதிக அளவு கன மழை பெய்ததினால்‌ ஏரிக்கு நீர்‌ வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால்‌ ஏரியின்‌ நீர்‌ மட்டம்‌ வேகமாக உயர்ந்து வந்த நிலையில்‌ ஏரியில்‌ இருந்து ரெகுலேட்டர்‌ வழியாக உபரி நீர்‌ வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால்‌ ஏரியில்‌ மிக கடுமையான அளவில்‌ அலைகள்‌ ஏற்பட்டு கலங்களின்‌ மேல்‌ தண்ணீர்‌ வெளியேறியது, இதனால்‌ காவல்‌ துறை பாதுகாப்பு அறை பின்‌ பகுதியில்‌ கரையில்‌ உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர்‌‌ பக்கத்தில்‌ அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால்‌ ஆன Apron சரிந்து மண்‌ அரிப்பு ஏற்பட்டது.

மண்‌ அரிப்பு ஏற்பட்டது எப்படி?

இது ஏரியின்‌ FTL-ஐ விட 2 மீட்டர்‌ உயரத்தில்‌ அமைந்துள்ளது, இதன்‌ வழியாக தண்ணீர்‌ வெளியேறவில்லை, மேலும்‌ கலங்கல்‌ வழியாக அலைகளால்‌ தண்ணீர்‌ வெளியேறியதால்‌ சாலையில்‌ அரிப்பு ஏற்பட்டது.

தற்போது மண்‌ அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில்‌ கிராவல்‌ மண்‌ கொட்டி மட்டப்படுத்தப்படும்‌ பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு திருவள்ளூர்‌ நீர்வளத் துறை செயற்பொறியாளர்‌ விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் புழல் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஏரியின் நிலை, நீர் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget