மேலும் அறிய

Pugar Petti: அடிக்கடி பூட்டி இருக்கும் வி.ஏ.ஓ. அலுவலகம்! எப்போது நிரந்தர தீர்வு கிடைக்கும்? மக்கள் வேதனை

Chengalpattu News: சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் தொடர்பாக பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அடிக்கடி பூட்டிய படி கிடக்கும் சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகம். அரசு விதிகளை மதிக்காமல் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர். நடவடிக்கை எடுப்பாரா செங்கல்பட்டு கோட்டாட்சியர்? என்று கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்


ரஹ்மத்துல்லா - சதுரங்கப்பட்டினம், செங்கல்பட்டு அனுப்பி வைத்த புகார்  . செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம்  சதுரங்கப்பட்டினம் வருவாய் கிராமத்தில் சுமார் 18000- க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வருவாய் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரகமதுல்லா நம்மிடம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மேலும் பேசுகையில் : தமிழக அரசாணையின்படி கிராம நிர்வாக அலுவலர் பணிபுரியும் பகுதியிலேயே வசிக்க வேண்டும். ஆனால் சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் உமாபதி அவர்கள் வெளியூரில் வசிப்பதால் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாகவும் மாலையில் முன்னதாகவே அலுவலகத்தை பூட்டி விடுவதாகவும் அரசு பணிக்காக வெளியில் சென்றால் எங்கே செல்கிறோம் எப்போது அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவிப்பு பலகையில் குறிப்பிடாமல் சென்று விடுவதாகவும், ஏழை எளிய பொதுமக்களிடம் கடுகடுப்பாக நடந்து கொள்வதாக  பொதுமக்கள் புலம்புவதாக ரஹமதுல்லா தெரிவித்துள்ளார். 

 மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்காளர்கள் உடைய பெயர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு கிராம நிர்வாக அலுவலரே முதன்மையான காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் தொடர்பாக பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தங்கள் தேவைகளை தங்கு தடை இன்றி பெற்றுக்கொள்ள உதவி செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


 

Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget