மேலும் அறிய

2026 தேர்தலில் விஜயுடன் பாமக கூட்டணியா? - அன்புமணி பரபரப்பு பேட்டி

தொழில் முதலீடுகள் சம்பந்தமாக உரிய ஆதாரங்களுடன் புத்தகம் வெளியிட்டுள்ளேன்; இதை பொய் என சொல்லும் திமுகவினர் என்னோடு மேடையில் விவாதம் செய்ய தயாரா? அன்புமணி திமுகவினருக்கு அழைப்பு.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

'தமிழக மக்கள் உரிமை மீட்பு' பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடைபெறும் மேற்கொண்டார். ஜூலை 25ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கிய இந்த நடைபயணம் நவம்பர் 9ஆம தேதி தர்மபுரி மாவட்டத்தில் நிறைவடைந்தது. இந்த நடைபயணத்தில் தான் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்ததாக அன்புமணி தெரிவித்தார். 

இந்த நடை பயணத்தின் மூலமாக கிடைத்த அனுபவம் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் முதலில் ஆரம்பம் முதல் கடைசி வரை தான் மேற்கொண்ட நடை பயணம் தொடர்பான காணொளியை வெளியிட்டார். அதில் பல்வேறு தரப்பு தொழிலாளர்களை சந்திப்பது மக்களின் குறைகளை கேட்டு அறிவது, ஆறுகள், ஏரிகளை பார்வையிடுவது உள்ளிட்ட வீடியோக்கள் செய்தியாளர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

தமிழக அரசுக்கு அழுத்தம்

பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 28 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இந்த 108 நாட்கள் மிகவும் முக்கியமான தினமும் இந்த நடை பயணத்தின் மூலமாக தான் சுட்டிக்காட்டிய சில பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு தொடர்ந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பல கட்ட போராட்டங்களின் மூலமாக மற்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பாமக போராடும் என்று தெரிவித்தார். 

வடசென்னையில் தமிழக அரசு செயல்படுத்தும் குப்பை எரி உலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அதன் காரணமாக புற்றுநோய், இதய நோய் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டி காண்பித்தார். ராணிப்பேட்டை குரோமிய கழிவுகளை அகற்ற எழுநூறு கோடி ரூபாயில் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் காந்தி இது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் மாம்பழம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. அதனை தவிர்க்க இனி ஆந்திரா, கர்நாடகாவில் வழங்கப்படுவது போல குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது ஒரு டன் மாம்பழத்திற்கு 25 ஆயிரம் வரை கொள்முதல் விலையை நிர்ணிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் கொண்டு வரக்கூடாது என்று போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூரமான அரசாக திமுக அரசு திகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

வள்ளலாரின் சாபம் சும்மா விடாது

வள்ளலாரின் சாபம் திமுகவை சும்மா விடாது என ஆவேசமாக பேசிய அன்புமணி, வள்ளலார் பெருவழி இடத்தை வள்ளலார் பன்னாட்டு மையமாக அமைப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் வள்ளலாரின் சாபம் சும்மா விடாது எனவும் குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவும் தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில் தமிழக அரசிடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மட்டுமே உள்ளது. இது போதுமானது அல்ல என கூறினார். மேலும், தமிழ்நாட்டில் விளையும் நெல்லில் மூன்றில் ஒரு பங்கை தான் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது மீதமுள்ள இரண்டு பங்கு நெல் தனியாரிடம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல்மணிகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகிறது. தமிழக அரசு இதற்காக தனியாக நிதி ஒதுக்கி விவசாயிகளின் இழப்பை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த நதிகளாக 37 நதிகள் உள்ளது. அவற்றில் 5 நதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். கூவம் ஆறு, அடையாறு ,சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவை மிக மிக மாசடைந்த நதிகளாக உள்ளது என குற்றம் சாட்டினார். அவற்றை சரி செய்ய திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் தெரிவித்தார்.

பாமக யாருடன் கூட்டணி

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்றும் கூட்டணி மந்திரி சபை அமையுமா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார். 

வெளிநாட்டு தொழில் முதலீடுகள் சம்பந்தமாக தான் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் பேசவில்லை என்று அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பதில் அளித்த அன்புமணி, உண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகளை ஆவண புத்தகமாக வெளியிடிருப்பதாகவும் இதற்கு தமிழக அமைச்சர்கள் முதலமைச்சர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..

தொடர்ந்து ஆவேசமான அன்புமணி, தொழில் முதலீடுகள் சம்பந்தமாக மேடை போடுங்கள் விவாதத்திற்கு வர நான் தயார் திமுக என்னுடன் விவாதம் செய்ய தயாரா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
சிவகங்கை: கோடை வெயில் கொடுமை.. பொதுமக்கள், முதியோர், கால்நடைகள் இருக்க கவனமாக எச்சரிக்கை!
சிவகங்கை: கோடை வெயில் கொடுமை.. பொதுமக்கள், முதியோர், கால்நடைகள் கவனமாக இருக்க எச்சரிக்கை!
PMK Candidate List: பாமக அதிரடி! 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிப்பு - யார் யார் தெரியுமா?
PMK Candidate List: பாமக அதிரடி! 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிப்பு - யார் யார் தெரியுமா?
ADMK Chennai Candidates : சென்னையில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள்.? ஸ்டாலின், உதயநிதிக்கு டஃப் கொடுக்க போவது யார்.?
சென்னையில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள்.? ஸ்டாலின், உதயநிதிக்கு டஃப் கொடுக்க போவது யார்.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Iran Hormuz: 6 நாடுகள் மட்டும் ஹார்மஸ் வழியாக பயணிக்கலாம், இந்தியா செய்தது என்ன? - ஈரான் அறிவிப்பு
Iran Hormuz: 6 நாடுகள் மட்டும் ஹார்மஸ் வழியாக பயணிக்கலாம், இந்தியா செய்தது என்ன? - ஈரான் அறிவிப்பு
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
பெரம்பூரில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்; ஒரேநாளில் 5 தொகுதிகளில் பரப்புரை- இதோ லிஸ்ட்!
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
1- 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை
TN Election 2026: இன்றே கடைசி..! தேர்தலில் வாக்களிக்க உடனே விண்ணப்பியுங்கள் - வாக்காளர் அட்டை பெற டிப்ஸ்
TN Election 2026: இன்றே கடைசி..! தேர்தலில் வாக்களிக்க உடனே விண்ணப்பியுங்கள் - வாக்காளர் அட்டை பெற டிப்ஸ்
எஸ்.வி.சேகர் பரபர பேச்சு: விஜய், பாஜக, அதிமுக மீது குற்றச்சாட்டு! திமுக ஆட்சி அமைக்குமா?
எஸ்.வி.சேகர் பரபர பேச்சு: விஜய், பாஜக, அதிமுக மீது குற்றச்சாட்டு! திமுக ஆட்சி அமைக்குமா?
Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Top 10 News Headlines: ஒரே நாளில் 5 இடங்களில் விஜய் பரப்புரை, ”பாகிஸ்தான் ஒரு தரகர் நாடு”, ஓப்பனர் சஞ்சு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஒரே நாளில் 5 இடங்களில் விஜய் பரப்புரை, ”பாகிஸ்தான் ஒரு தரகர் நாடு”, ஓப்பனர் சஞ்சு - 11 மணி வரை இன்று
Embed widget