மேலும் அறிய

2026 தேர்தலில் விஜயுடன் பாமக கூட்டணியா? - அன்புமணி பரபரப்பு பேட்டி

தொழில் முதலீடுகள் சம்பந்தமாக உரிய ஆதாரங்களுடன் புத்தகம் வெளியிட்டுள்ளேன்; இதை பொய் என சொல்லும் திமுகவினர் என்னோடு மேடையில் விவாதம் செய்ய தயாரா? அன்புமணி திமுகவினருக்கு அழைப்பு.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

'தமிழக மக்கள் உரிமை மீட்பு' பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடைபெறும் மேற்கொண்டார். ஜூலை 25ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கிய இந்த நடைபயணம் நவம்பர் 9ஆம தேதி தர்மபுரி மாவட்டத்தில் நிறைவடைந்தது. இந்த நடைபயணத்தில் தான் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்ததாக அன்புமணி தெரிவித்தார். 

இந்த நடை பயணத்தின் மூலமாக கிடைத்த அனுபவம் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் முதலில் ஆரம்பம் முதல் கடைசி வரை தான் மேற்கொண்ட நடை பயணம் தொடர்பான காணொளியை வெளியிட்டார். அதில் பல்வேறு தரப்பு தொழிலாளர்களை சந்திப்பது மக்களின் குறைகளை கேட்டு அறிவது, ஆறுகள், ஏரிகளை பார்வையிடுவது உள்ளிட்ட வீடியோக்கள் செய்தியாளர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

தமிழக அரசுக்கு அழுத்தம்

பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 28 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இந்த 108 நாட்கள் மிகவும் முக்கியமான தினமும் இந்த நடை பயணத்தின் மூலமாக தான் சுட்டிக்காட்டிய சில பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு தொடர்ந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பல கட்ட போராட்டங்களின் மூலமாக மற்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பாமக போராடும் என்று தெரிவித்தார். 

வடசென்னையில் தமிழக அரசு செயல்படுத்தும் குப்பை எரி உலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அதன் காரணமாக புற்றுநோய், இதய நோய் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டி காண்பித்தார். ராணிப்பேட்டை குரோமிய கழிவுகளை அகற்ற எழுநூறு கோடி ரூபாயில் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் காந்தி இது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் மாம்பழம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. அதனை தவிர்க்க இனி ஆந்திரா, கர்நாடகாவில் வழங்கப்படுவது போல குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது ஒரு டன் மாம்பழத்திற்கு 25 ஆயிரம் வரை கொள்முதல் விலையை நிர்ணிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் கொண்டு வரக்கூடாது என்று போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூரமான அரசாக திமுக அரசு திகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

வள்ளலாரின் சாபம் சும்மா விடாது

வள்ளலாரின் சாபம் திமுகவை சும்மா விடாது என ஆவேசமாக பேசிய அன்புமணி, வள்ளலார் பெருவழி இடத்தை வள்ளலார் பன்னாட்டு மையமாக அமைப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் வள்ளலாரின் சாபம் சும்மா விடாது எனவும் குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவும் தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில் தமிழக அரசிடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மட்டுமே உள்ளது. இது போதுமானது அல்ல என கூறினார். மேலும், தமிழ்நாட்டில் விளையும் நெல்லில் மூன்றில் ஒரு பங்கை தான் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது மீதமுள்ள இரண்டு பங்கு நெல் தனியாரிடம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல்மணிகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகிறது. தமிழக அரசு இதற்காக தனியாக நிதி ஒதுக்கி விவசாயிகளின் இழப்பை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த நதிகளாக 37 நதிகள் உள்ளது. அவற்றில் 5 நதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். கூவம் ஆறு, அடையாறு ,சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவை மிக மிக மாசடைந்த நதிகளாக உள்ளது என குற்றம் சாட்டினார். அவற்றை சரி செய்ய திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் தெரிவித்தார்.

பாமக யாருடன் கூட்டணி

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்றும் கூட்டணி மந்திரி சபை அமையுமா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார். 

வெளிநாட்டு தொழில் முதலீடுகள் சம்பந்தமாக தான் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் பேசவில்லை என்று அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பதில் அளித்த அன்புமணி, உண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகளை ஆவண புத்தகமாக வெளியிடிருப்பதாகவும் இதற்கு தமிழக அமைச்சர்கள் முதலமைச்சர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..

தொடர்ந்து ஆவேசமான அன்புமணி, தொழில் முதலீடுகள் சம்பந்தமாக மேடை போடுங்கள் விவாதத்திற்கு வர நான் தயார் திமுக என்னுடன் விவாதம் செய்ய தயாரா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget