மேலும் அறிய

Piraisoodan Passes Away | உடல்நலக்குறைவால் காலமானார் கவிஞர் பிறைசூடன்..

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் இன்று காலமானார்.

தமிழ் திரையுலகில் காலத்தால் என்றும் மறையாத அளவிற்கு பெரும்பங்கு அளித்த பாடலாசிரியர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பிறைசூடன். 65 வயதான இவர் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது தமிழ்த் திரையுலக பிரபலங்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பயணம்:

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி பிறந்தவர் பிறைசூடன்.  1985ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த சிறை என்ற படத்தில் “ராசாத்தி ரோசாப் பூவே” என்ற பாடலை எழுதியதன் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இளையராஜா இசையில் இவர் எழுதிய “மீனம்மா, மீனம்மா”  என்ற பாடல் மூலம் இவரது புகழ் பன்மடங்கு பெருகியது. தமிழ்நாட்டில் இன்றும் அனைத்து திருமண வீடுகளிலும் ஒலிக்கும் “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணும்தான்” என்ற திருமண வாழ்த்துப்பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.


Piraisoodan Passes Away | உடல்நலக்குறைவால் காலமானார் கவிஞர் பிறைசூடன்..

விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ஆட்டமா? தேரோட்டமோ? என்ற பாடலையும், ஒரு தலை காதலர்களின் கீதமாகவும், காதல் தோல்வியடைந்தவர்களின் விருப்ப பாடலாகவும் விளங்கும் இதயம் படத்தில் இடம்பெற்றுள்ள “இதயமே…. இதயமே” என்ற பாடல், இன்றும் கேட்கும்போதே மனதை வருடும் “என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி”, “நடந்தால் இரண்டடி” “வெத்தல போட்ட சோக்குல” என்ற பல வெற்றிப்பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அளித்துள்ளார்.

விருப்ப பாடலாசிரியர்கள் :

பொதுவாக ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஆஸ்தான பாடலாசிரியாக ஒருவர் விளங்குவர். ஆனால், பிறைசூடன் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கிய அனைவருக்கும் விருப்பமான பாடலாசிரியராக விளங்கினார். இளையராஜாவின் பல வெற்றிப்பாடல்களை பிறைசூடன் எழுதியிருந்தாலும் தேனிசைத் தென்றல் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை 1990 காலகட்டங்களில் எழுதினார். இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியுள்ளார். 


Piraisoodan Passes Away | உடல்நலக்குறைவால் காலமானார் கவிஞர் பிறைசூடன்..

மூன்று தலைமுறைக்கும் பாடல் :

எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் திரையுலகை ஆட்சி செய்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடலாசிரியராக அறிமுகமான பிறைசூடன், தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத தனி இசை ராஜ்ஜியம் இளையராஜா இசையிலும், இசையில் புதுமையை புகுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடல் எழுதியுள்ளார். மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்த பாடலாசிரியர் என்ற அரிய பெருமையை பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பாடலாசிரியர்களில் பிறைசூடனும் ஒருவர்.

விருதுகள்:


Piraisoodan Passes Away | உடல்நலக்குறைவால் காலமானார் கவிஞர் பிறைசூடன்..

1991ல் இளையராஜா இசையில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற சோலப் பசுங்கிளியே என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளார். தேவா இசையில் தாயகம் படத்தில் எழுதிய பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இரண்டாம் முறையாக பெற்றார். 2010ம் ஆண்டும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். பாடலாசிரியராக மட்டுமின்றி பிறைசூடன் தமிழ் திரையுலகின் சிறந்த எழுத்தாளராகவும் வலம் வந்தார். மேலும் தனது மகன் கவின்சிவா இசையமைத்த ஜெயிக்குற குதிரை என்ற படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget