மேலும் அறிய

Parandur Airport Protest: கைவிடப்பட்டது பரந்தூர் விமான நிலைய போராட்டம் - என்ன காரணம்?

Parandur Airport Protest: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த, பொதுமக்களின் போரட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Parandur Airport Protest: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு  போராட்டம் 600 நாளாக நடைபெற்று வந்த நிலையில், போராட்டம் கைவிடப்படுகிறது. 600 நாளாக தொடர்ந்து, மாலை நேர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் இன்று முதல் போராட்டத்தை கை விடுவதாக அறிவித்துள்ளனர்.

சட்டநடவடிக்கை எடுக்க முடிவு:

விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் சட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினரை அனுமதிக்க மாட்டோம் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வயல்வெளிகளில் இறங்கி போராட்டம்:

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊர் மக்களும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கமும்  பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். ஆனாலும், நில கையகப்படுத்துதல் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதனால்,  அரசை கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பேரணியாக சென்று வயல்வெளிகளில் இறங்கி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   4 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக இதுவரை நாளிதழ்களில் வெளியான செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏகனாபுரம் கிராமத்திலிருந்து பேரணியாக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி கிராம மக்கள் ஊர்வலமாக சென்று வயல்வெளியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக அங்கு 100-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து தொடர் போராட்டம் கைவிடப்படுவதாகவும், சட்ட போராட்டம் தொடங்க உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: Semmozhi Conference: சென்னையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - எப்போது நடக்கிறது?

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு ஏன்?

பரந்தூர் விமான நிலையத்தால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கக்கூடும்.  நீர்நிலைகள் அழியும் சூழல் உருவாகும். இதனால், ஒட்டுமொத்தமாக தங்களது வாழ்வாதாரமே பாதிக்கும் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆரம்பத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த 4563 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என  கூறப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான அரசாணையில் 20 கிராமங்களைச் சேர்ந்த 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் 2682.62 ஏக்கர் WETLANDS(வேளாண் நிலம்+நீர்நிலை) என்பது அதிர்ச்சியளிக்கிறது.  விமான நிலையைம் வந்தால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திட்டங்கள், கட்டுமானங்கள், அடிப்படை வசதிகள் எழுப்ப நிலம் பயன்படுத்தப்படும். இதனால், தங்களது உடைமைகளை இழக்க நேரிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget