மேலும் அறிய

கோயில் பிரசாதங்களில் இனி ஆவின் நெய் மட்டுமே: அறநிலையத்துறை ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

ஆவினால் தயாரிக்கப்பட்ட நெய்யினைக்கொண்டு கோயில்களில் விளக்குஏற்றும் போது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு வளாகம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய்யை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என  இந்து சமய அறநிலையத்துறை ஆணைப்பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும்  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 44 ஆயிரத்து 218 கோயில்கள் உள்ளன. இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது பிரசாதங்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு வசதியாகவே அனைத்துக்கோவில்களிலும் பிரசாத சென்டர்கள் அமைக்கப்பட்டு விநியோகம் நடைபெற்றுவருகிறது. ஆனால் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய இந்த பிரசாதங்கள் அனைத்தும்  தரம் குறைவாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதோடு அனைத்துக்கோவில்களிலும் சூடம் ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்கள் நெய் விளக்குகளை ஏற்ற ஆரம்பித்தனர். நாளடைவில் இந்த நெய் விளக்குகளின் தரம் குறைந்ததோடு இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டது. இதுக்குறித்தும் பக்தர்கள் மற்றும் ஆன்மீதவாதிகள் பல முறை புகார் தெரிவித்ததன் விளைவாகத் தான், தற்போது இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு ஒன்றைப்பிறப்பித்துள்ளது. அதன்படி, கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நெய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

  • கோயில் பிரசாதங்களில் இனி ஆவின் நெய் மட்டுமே: அறநிலையத்துறை ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

இதுக்குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு இணை ஆணையர்களுக்கு, ஆணையர் ஜெ.குமரகுருபரன் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத்  திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும் நெய் பொருள்களை மட்டும் தான் கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும் மற்றும் 15 மில்லி லிட்டர் அளவு கொண்ட பேக்கிங்கிலிருந்து 20 கிலோ கிராம் வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை, ஆவின் நிறுவனத்தில் விற்பனைக்குத் தயாராக உள்ளது. எனவே உடனடியாக ஆவின் நிறுவனப் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கோயில் பிரசாதங்களில் இனி ஆவின் நெய் மட்டுமே: அறநிலையத்துறை ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

இதோடு கோவில் கருவறை மற்றும் கோவில் பிரகாரங்களில் ஏற்றப்படும் விளக்குள் அனைத்தும் ஆவினால் தயாரிக்கப்பட்ட நெய்யினைக்கொண்டு தான் ஏற்ற வேண்டும்.  இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு கோவில் வளாகம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதற்காக தமிழக அரசு இந்த உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது என ஆணையர் ஜெ.குமரகுருபரன் சுற்றறிக்கையின் வாயிலாக கூறியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தமிழக கோவில் நிலங்களை  ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமிழக அரசு மீட்டு வரும் நிலையில் தற்போது இதுப்போன்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!
மது பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.. விடிந்ததும் காவல் நிலையத்தில் நடந்த பகீர் திருப்பம்!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Embed widget