மேலும் அறிய

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ. மற்றும் பி.எல். படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகளவில் நடப்பதை உறுதி செய்வதற்கு நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் நன்றாகப் படித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் மூலம் 400-க்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்துவருகின்றனர். அதைப்போலவே கால்நடை மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் ஆகிய தொழில்படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. 

இதைப் பற்றி ஆராய்ந்து அரசுக்கு யோசனை தெரிவிக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு வெளியிட்டுள்ளார்.

அதில், “ 2020- 21 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோன்று பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில், கடந்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலைவகிக்கும் சுயநிதி கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கைப்பட்டுள்ளனர் என்றும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.” என்றும்,


பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

”இக்கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலைகள் குறித்தும் அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், 
கடந்த ஆண்டுகளில் அந்த மாணவர்களின் சேர்க்கை பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு இருக்கிறது என ஆய்வுசெய்தும், மேலே கூறிய காரணிகளால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கையானது, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவிலேயே இருந்தால், அந்த நிலையை சரிசெய்யவும்,  இதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யவும், 

டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் ஆணையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என பல தரப்பினரும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியநிலையில், கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஓமியோ, சித்தா, ஆயுர்வேதா ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அதிமுக ஆட்சி கொண்டுவந்தது. முன்னதாக, கடந்த செப்டம்பர் 15 அன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டவரைவு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடித்தார். அமைச்சர்கள் இதற்காகவே அவரைச் சந்தித்து வலியுறுத்தினர். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஆளுநர் பன்வாரி லாலுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் தாமதம் ஆகிக்கொண்டே போகவே, அக்டோபர் 29 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. மறுநாளே ஆளுநர் இந்த சட்டவரைவுக்கு ஒப்புதல் அளித்தார். அது, முறைப்படி சட்டமாகி, முதல் முறையாக தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் 400-க்கு மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகளின் நிலை என்ன?
குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகளின் நிலை என்ன?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகளின் நிலை என்ன?
குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகளின் நிலை என்ன?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
NEET UG 2025: திட்டமிட்டபடி வெளியாகுமா நீட் தேர்வு முடிவுகள்? எப்போது? காண்பது எப்படி?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
அடடே.. 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை- அள்ளித்தரும் அரசு- இதோ விவரம்!
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறந்து வைப்பு .. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
Embed widget