மேலும் அறிய

கால்வலி வராமல் இருக்க மாடிப்படி உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ? - இதோ கட்டுமான டிப்ஸ்

சொந்தமாக வீடு கட்டுபவர்கள் மாடிப்படி அமைப்பதில் காட்டும் அலட்சியத்தால் , பிற்காலத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

பட்ஜெட் அடிப்படையில் வீடுகள்

ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு நம் பட்ஜெட் அடிப்படையில் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தாலும் உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பெரும்பாலான இடங்களில் வீட்டுக்கான அனைத்து பாகங்களையும் கவனமாக பார்த்து அமைப்பவர்கள் கூட, மாடிப்படி விஷயத்தில் மிகுந்த அலட்சியமாக செயல்படுகின்றனர். வீட்டுக்கான மாடிப்படி எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் உரிமையாளர்கள் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

வரைப்படம் தயாரிக்கும் போது திட்டமிடல்

உங்கள் புதிய வீட்டை கட்டும் போது அதற்கான வரைபடம் தயாரிக்கும் போதே மாடிப்படி எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் கவனமாக திட்டமிட வேண்டும். வரைபட நிலையிலேயே இதற்கான இடத்தை தேர்வு செய்து விட்டால் எதிர்காலத்தில் நெருக்கடியை தவிர்க்கலாம்.

பொதுவாக வீடுகளில் உட்புறம் அல்லது வெளிப்புறத்தில் மாடிப்படி அமைக்கப்படும். தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்ற வகையில் மாடிப்படி அமையும் இடம், அளவு போன்ற விஷயங்கள் வேறுபடும் என்பதை உரிமையாளர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

மாடிப்படி என்ன அளவு இருக்க வேண்டும்

தனி வீடு என்றால் மாடிப்படி அமைக்கும் போது அதன் அகலம், மூன்று அடி அளவுக்கு இருந்தால் போதும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு என்றால், ஒரே சமயத்தில் அதிக நபர்கள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் மாடிப்படியின் அகலம் அதற்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக மாடிப்படி அமைக்கும் போது அதில் கால் வைக்கும் இடத்தின் அகலம் , பாதம் முழுமைக்கும் போதுமானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, படியின் உயரம், ஆறு அங்குலம் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாடிப்படிக்கான கட்டுமான பணியில், ரைசர் எனப்படும் உயரத்தை கடைபிடிப்பதில் தான் பல்வேறு தவறுகள் நடக்கின்றன. இதற்கு பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் செங்கலின் உயரம், நான்கு அங்குலம் தான் இருக்கும். இதில், இரண்டு செங்கலை ஒன்றின் மீது ஒன்று என்ற அடிப்படையில் அடுக்கினால், எட்டு அங்குலம் அளவுக்கு உயரம் அதிகரிக்கும்.

கால்வலி ஏற்படுவதை தவிர்க்க

ஒரு செங்கலை பயன்படுத்தினால் மேற்பூச்சுடன் சேர்த்து, ஐந்து அங்குலம் தான் வரும். இதற்கு ஒரு செங்கலை முழுமையாகவும், அடுத்த செங்கலை உடைத்தும் பயன்படுத்தும் போது ஆறு அங்குல உயரத்தை உறுதி செய்ய முடியும். இவ்வாறு சரியான உயரத்தை உறுதி செய்து மாடிப்படி அமைத்தால் அதை பயன்படுத்துவோருக்கு கால் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தரை பகுதியில் இருந்து மேல் தளம் வரை எத்தனை படிகள் அமைக்க வேண்டும் என்பதை ஆறு அங்குல உயரத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இந்த வழிமுறைகளை கவனமாக கடைப்பிடித்தால் வீட்டுக்கான மாடிப்படியை எவ்வித பிரச்னையும் இன்றி பயன்படுத்தலாம்.

கட்டட வரைபட தயாரிப்பின் போது மாடிப்படி அமையும் இடம் மட்டுமல்லாது அதன் உயரம், அகலம் தொடர்பான விபரங்களையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். மாடிப்படிக்கான கட்டுமான பணியில், கால் வைக்கும் இடத்துக்கான உயரம் ஆறு அங்குலமாக இருப்பதை துல்லியமாக கடைப்பிடித்தால் பயன்பாட்டு நிலையில் கால் வலி ஏற்படாது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget