மேலும் அறிய

“எனக்கு ஒரு சீட் கூட வேண்டாம்; முதல்வர் இதை செய்தால் போதும்” - வேல்முருகன் ஏன் இப்படி பேசினார்?

ஈழ தமிழர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தால் ஒரு சீட் கூட வேண்டாம் - வேல்முருகன்

விழுப்புரம்: ஈழ தமிழர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தால் ஒரு சீட் கூட கேட்காமல் அவருக்கு ஆதரவளிப்பேன் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், முள்ளிவாய்க்கல் இனப்படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடரினை பெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சுடரினை நினைவேந்தல் நிகழ்வில் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளுக்கு மெழுகுவர்த்தி கொடுக்கப்பட்டிருந்தபோது அதிகளவு காற்று அடித்தால் மெழுகு வர்த்தி ஏத்த முடியாமல் போனதால் மூவாயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கையில் வைத்திருந்த செல்போன் டார்ச் லைட் வெளிச்சம் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்....

இலங்கையில் ஈழ தமிழர்கள் படுகொலையின்போது பாரத நாடு இந்தியா தடுக்காமல் இலங்கை சிங்கள ராணுவத்திற்கு உதவியதாகவும், சர்வதேச ஐக்கிய சபையில் நீதி விசாரனை வாங்கி தரமுடியவில்லை , இந்தியா வணிகசந்தையாக இருப்பதால் ஈழ தமிழர்களுக்கு நீதி பெற்று தர முடியவில்லை என்றும் இனி வரும் காலங்களில் தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் ஈழத்தில் நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்க அழுத்தம் தர வேண்டும், தேர்தலுக்கு யார் வேண்டுமானாலும் வாக்கு கேளுங்கள் ஆனால் ஈழ தமிழர்கள் கொலை செய்யபட்டவர்களுக்கு நீதி கேட்க வேண்டும் ஈழத்தில் எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டு இருக்கிறது அதற்கு நீதி கேட்காமல் இங்கு சினிமா மோகமும், சாதிய அரசியலும் தான் நிகழ்கிறது என வேதனை தெரிவித்தார்.

இந்தியாவில் ஈழ உறவுகளுக்கு மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டுமென போராடி வருவதாகவும் தான் யாரிடத்திலும் பணத்தை பெற்று ஈழ உறவுகளுக்கு உதவி செய்யவில்லை பாஸ்போர்ட் இல்லாமல் வந்த ஈழ தமிழர்களை தனது முந்திரி காட்டில் பாதுகாத்து பூமி பந்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், விடுதலைக்காக சொத்து பத்துக்களை கொடுத்தவர்கள் இடம்தெரியாமல் உள்ளனர். கஞ்சா, லாட்டரி, தாது மணல் கொள்ளையில் ஈடுபடுவர்களிடமிருந்து நிதி பெற்று நினைவேந்தல் நிகழ்வு நடத்தவில்லை, வளரும் பிள்ளைகளுக்கு தீய பழக்கங்கள் இல்லாமல் வளர்க்க வேண்டும் இனப்படுகொலை குறித்து அவர்களுக்கு சொல்லி தரவேண்டும் என வலியுறுத்தினார். தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன் நீங்கள் ஆட்சி கட்டிலில் இருக்கும் போதே ஈழ படுகொலைக்கு தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும், பொதுகணக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் தனக்கு தேர்தலில் சீட்டு கொடுங்கள் கொடுக்காமல் போங்கள் ஆனால் இதை செய்யுங்கள் என தெரிவித்தார். ஈழ தமிழர்களுக்கு நான் கேட்பதை செய்தால் ஒரு சீட் கூட இல்லாமல் ஸ்டாலினினுக்கு ஆதரவளிப்பேன்

ஒத்த சீட்டு முத்தையா தான் ஈழ தமிழர்களுக்கு உதவி வருகிறேன். கிடைத்த ஒத்த சீட்டினை வைத்து கொண்டு ஒப்பந்தங்கள் காண்ட்ராக் கேட்டு முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை, விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் கூட்டம் கூட்டுகிறார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மாமல்லபுரத்தில் கூட்டம் கூட்டுகிறார் அந்த கூட்டத்தினை ஈழத்தமிழர்கள் விடுதலைக்கான கூட்டம் கூட்ட வேண்டும் அப்போது தான் நீதி கிடைக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget