மேலும் அறிய

Minister Sivasankar: கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியளித்தார்.

போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, பின்னர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார். 

இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி பேரணி, தீவுத்திடலில் நிறைவு பெற்றது.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடை பேரணி இங்கே நடைபெறுகிறது. 19 போதிலிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் சாலை விபத்தில் பாதிக்கப்படுகிறார்கள். 

சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்ற இன் உயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை ஏற்படுத்தி, உயிரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கான தொகையை செலுத்தி உயிரைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்திலும் விழிப்புணர்வு வரவேண்டும், கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது சாலை விபத்து குறைந்திருந்தாலும் முற்றிலும் குறைக்க  துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” கூறினார்.

தொடர்ந்து கிளாம்பாக்கம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3,200 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று கொரோனா காலத்திற்குபின் சுமார் 4,000 பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, படிப்படியாக வாங்கப்பட இருக்கிறது. மீதி இருக்கும் காலக்கட்டத்தில் இன்னும் கூடுதலாக புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து இங்கு பேச வேண்டும். 

கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை: 

போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். அதற்கு காரணம், ஸ்ரீபெரும்புத்தூரில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். 

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இன்று ஆசியாவிலேயே மிகச் சிறந்த பேருந்து முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைந்துள்ளது. இதனை பல்வேறு பத்திரிக்கைகளும் பாராட்டி வருகிறது. இதையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்ப மறுத்தால், அவர் கிளாம்பாக்கத்திற்கு வர தயார் என்றால், அழைத்து சென்று என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார். 

முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்:

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், ”கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இல்லை, பெரிய பிரச்சனைகள் இருந்தன. அனையெல்லாவற்றையும் நாங்கள் தீர்த்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் சொல்லக்கூடிய சிறு பிரச்சனையையும் தீர்த்து வைப்போம்” என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget