மேலும் அறிய

Minister Ponmudi : "நெருக்கும் செம்மண் குவாரி வழக்கு” தப்புவார அமைச்சர் பொன்முடி ? தொடருமா பதவி ?

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நேரில் ஆஜராகி சாட்சியம்.

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதன் வழக்கு விசாரணை 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 44 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 28 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

முன்னாள் மாவட்ட ஆட்சியர் சாட்சியம்

இந்நிலையில் மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோபிநாதன், சதானந்தம், ஜெயச்சந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் நேற்று அரசு தரப்பு சாட்சியாக விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருபவருமான பிரஜேந்திர நவ்நீத், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.


அப்போது அவர், நேற்று காலை 11.45 மணிக்கு இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார். வானூர் தாசில்தார், விழுப்புரம் கோட்டாட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், அவர்கள் சமர்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்தும் கடந்த 21.3.2007 அன்று ஜெயச்சந்திரன் பெயரிலும், 4.10.2007 அன்று பொன்.கவுதமசிகாமணி பெயரிலும் செம்மண் குவாரி உரிமத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது என்றுகூறி சாட்சியம் அளித்தார். அப்போது செம்மண் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக நீதிபதி கேட்ட சில கேள்விகளுக்கும் பிரஜேந்திர நவ்நீத் உரிய பதில்களை அளித்தார். சுமார் 1½ மணி நேரமாக சாட்சியம் அளித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஜேந்திர நவ்நீத், தனது சாட்சியத்தை மதியம் 1.15 மணிக்கு நிறைவு செய்தார். அதன் பிறகு மதிய உணவு இடைவேளை முடிந்து 2.30 மணிக்கு மீண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஜேந்திர நவ்நீத், ஆஜரானார். அவரிடம் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விசாரணை மாலை 3.15 மணிக்கு முடிவடைந்தது.

விசாரணை ஒத்திவைப்பு

ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஜேந்திர நவ்நீத் அளித்த சாட்சியம் மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை முழுவதையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இதன் வழக்கு விசாரணையை வருகிற 5-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே உயர்நீதிமன்ற தீர்ப்பால் பதவி இழந்த பொன்முடி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வழக்கில் இருந்து தற்காலிக விடுதலை வாங்கியதன் விளைவாக மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்நிலையில், இந்த செம்மண் குவாரி வழக்கும் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவது அவருக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ்  ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
Embed widget