பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க ஒப்புதல் – மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு
மழை வெள்ள பாதிப்புக்காக வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதி தராமல் மத்திய அரசு மீண்டும் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது.

மழை வெள்ள பாதிப்புக்காக வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதி தராமல் மத்திய அரசு மீண்டும் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு ரூ. 1,554.99 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பெயர் இதில் இடம்பெறவில்லை.
The Modi government stands like a rock in support of the disaster-affected people.
— Amit Shah (@AmitShah) February 19, 2025
Today, the MHA approved an additional central assistance of Rs. 1554.99 crore to Andhra Pradesh, Nagaland, Odisha, Telangana, and Tripura under the NDR fund. This is in addition to the Rs.…
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், “ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு ரூ. 1,554.99 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது.
ஏற்கெனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என தமிழக அரசு குற்றசாட்டு வைத்து வரும் நிலையில் தற்போது பேரிடர் நிதியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.
மும்மொழிக்கொள்கையை கடைபிடித்தால்தான் தமிழகத்துக்கு நிதி என மத்திய கல்வி அமைச்சர் சொன்னது தமிழகத்தில் புகைச்சலை ஏற்படுத்தி வரும் நிலையில் பேரிடர் நிதி கோரிக்கையையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

