மேலும் அறிய

மகளுக்காக 30 ஆண்டுகள் ஆணாக வாழ்ந்த பேச்சியம்மாள்: நெகிழ்ச்சிப் பின்னணி!

பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்ததால் , முத்து மாஸ்டர் என அழைக்கப்படுகிறார். தனது முத்து என்னும் செயற்கை பெயராலேயே ஆதார் கார்டும் வைத்திருக்கிறார்

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியை அடுத்த காட்டுநாயக்கன் பட்டி பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் 30 ஆண்டுகளாக ஆணாக வாழ்ந்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பேச்சியம்மாளுக்கு அவரது 20 வயதில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில், அவரது கணவர் திருமணமான 15 நாட்களிலேயே உயிரிழந்துள்ளார். இளம் வயதிலேயே கைம்பெண்ணான பேச்சியம்மாளுக்கு ஆறுதலாக அவரது வயிற்றில் பெண் குழந்தை உருவாகியிருக்கிறது. வாழ்க்கையின் ஆதாரமாக அக்குழந்தையை எண்ணியவர் குழந்தைக்காக வாழத் தொடங்கியிருக்கிறார். ஆனால் இளம்பெண்ணான அவரை மறுமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.

அது பிடிக்காத பேச்சியம்மாள் வேறு ஊருக்குக் குழந்தையுடன் இடம்பெயர்ந்துள்ளார். ஆனால் அங்கு அவருக்கு பாலியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடிவு செய்த அவர், தனது சிகை அலங்காரத்தை மாற்றி, வேட்டி சட்டை அணிந்துகொண்டு ஆணாகவே மாறியுள்ளார். மேலும் அண்ணாச்சி என அந்த ஊரில் அழைக்கப்பட்டிருக்கிறார்., மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் , அங்கு முத்து என்ற பெயரால் அழைக்கப்பட்டார். 

மகளுக்காக 30 ஆண்டுகள் ஆணாக வாழ்ந்த பேச்சியம்மாள்: நெகிழ்ச்சிப் பின்னணி!

ஹோட்டல், டீக்கடை, பெயின்டிங் மற்றும் கடினமான கூலி வேலை என எதுவாக  இருந்தாலும் பேச்சியம்மாள் பழகிக்கொண்டார். பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்ததால் , முத்து மாஸ்டர் என அழைக்கப்படுகிறார். தனது முத்து என்னும் செயற்கை பெயராலேயே ஆதார் கார்டும் வைத்திருக்கிறார் பேச்சியம்மாள். பேருந்து தொடங்கி கட்டணக் கழிப்பிடம் வரை அனைத்தும் ஆண்கள் வரிசையைத்தான் பின்பற்றியிருக்கிறார்.

தனது பெண் குழந்தையைப் படிக்க வைத்து மணம் முடிக்கும் வரை தனது அடையாளத்தை யாருக்கும் தெரியாமலேயே ரகசியமாக வைத்திருக்கிறார் பேச்சியம்மாள். “கணவன் தொட்ட உடம்பை வேறு யாரும் தொடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஆணாகவே மாறிவிட்டேன் ...“ என பார்ப்பவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார் பேச்சியம்மாள்.

இளம் வயதில் எல்லா வேலைகளையும் செய்த தனக்கு , 50 வயதாகிவிட்டதால் தற்போது எந்த வேலையும் செய்ய முடிவதில்லை என்றும் 100 நாட்கள் வேலை திட்டத்தில்தான் தனக்கு 100 ரூபாய் கிடைப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார். எனது குடும்பத்தில் நான் ஆணாக மாறியதில் எந்த எதிர்ப்பும் இல்லை எனக் கூறும் பேச்சியம்மாள், தனது குடும்பத்தில் விசேஷ நாட்களில் கூட தனக்கு வேஷ்டி சட்டை எடுத்து கொடுப்பார்கள் என்கிறார்கள் .
ஆண்களிடம் இருந்து தப்பிக்கத்தான் இப்படி மாறினேன் எனக் கூறும் பேச்சியம்மாள், எந்தவொரு ஒழுக்கமான பெண்ணையும் தவறாகப் பேசிவிடாதீர்கள். அக்கா, தங்கையாக நினையுங்கள் எனப் பல ஆண்களுக்கு அறிவுரை செய்திருக்கிறேன் எனப் பேச்சியம்மாள் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
அட்டாக் செய்ய வந்த திமுக... திருப்பி அடித்த தவெக.. ரகுபதியால் கலவர பூமியான சட்டப்பேரவை!
அட்டாக் செய்ய வந்த திமுக... திருப்பி அடித்த தவெக.. ரகுபதியால் கலவர பூமியான சட்டப்பேரவை!
CM Vijay vs Udhayanidhi: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!
CM Vijay vs Udhayanidhi: நாட்டு நிலவரம் தெரியாதா?.. திமுகவை சீண்டிய விஜய்.. பதிலடி கொடுத்த உதய்.. முற்றிய மோதல்!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget