"நீ தனியா கூட போய் கூட எதிர்த்து இருந்திருக்கலாம், இன்று நாடே சிரிக்கிறது" - எம்.சி.சம்பத் யாரை சொல்கிறார்?
இன்று நாடே சிரிக்கிறது அந்த நிலைமைக்கு தள்ளியவர் முன்னாள் முதல்வர்... இது நியாயம் தானா தர்மம் தானா? என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி.

இன்று நாடே சிரிக்கின்ற நிலைமை... துரோகம் செய்தது நியாயம் தானா? தர்மம் தானா? முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து அதிமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசியபோது, “எம்ஜிஆர் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை தீய சக்தி என்று சொன்ன திமுகவில் முன்னாள் முதல்வர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை, யாரை எதிர்க்க வேண்டுமோ அதை விட்டுட்ட... நீ தனியா கூட போய் கூட எதிர்த்து இருந்திருக்கலாம், இன்று நாடே சிரிக்கிறது. அந்த நிலைமைக்கு தள்ளியவர் முன்னாள் முதல்வர்... இது நியாயம் தானா தர்மம் தானா? என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, திமுகவை வீட்டுக்கு அனுப்பவே நாம் ஒன்றிணைந்து இருப்பதாக தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக நிர்வாகிகள், பாஜக கடலூர் மாவட்ட செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், பாமக மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், அமமுக கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.























