மேலும் அறிய

Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் கரண்ட் கட்..

Mayiladuthurai Power Shutdown 11.12.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இன்று தினம் வியாழக்கிழமை, 11.12.2025 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சீர்காழி கோட்டம், இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவின் செயற்பொறியாளர் (பொறுப்பு), மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எதற்காக மின்தடை?

சீர்காழி கோட்டத்தில் இயங்கி வரும் வைத்தீஸ்வரன்கோவில் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையம், அரசூர் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், மற்றும் எடமணல் 33/11 கி.வோ. துணை மின் நிலையம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாக இந்த மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மிகவும் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மின்தடை நேரம்

மின்தடை அமலில் இருக்கும் நாள் மற்றும் நேரம் பின்வருமாறு:

* நாள்: 11.12.2025 (வியாழக்கிழமை)

*நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

சுமார் எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்ட பகுதிகள்

வைத்தீஸ்வரன்கோவில், அரசூர், மற்றும் எடமணல் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. வைத்தீஸ்வரன்கோவில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * வைத்தீஸ்வரன்கோவில்

 * சீர்காழி முழுவதும்

 * புங்கனூர்

 * சட்டநாதபுரம்

 * மேலச்சாலை

 * கதிராமங்கலம்

 * ஆத்துக்குடி

 * திருப்புங்கூர்

 * தென்பாதி

 * பனமங்கலம்

 * கோவில்பத்து

 * கொள்ளிடம் முக்கூட்டு

 * விளந்திட சமுத்திரம்

 * புளிச்சகாடு

 * கற்பகம் நகர்

 * புதிய பேருந்து நிலையம்

 * பழைய பேருந்து நிலையம்

 * மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

2.அரசூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * புத்தூர்

 * எருக்கூர்

 * மாதிரிவேளுர்

 * வடரங்கம்

 * அகணி

 * குன்னம்

 * மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

3.எடமணல் 33/11 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * எடமணல்

 * திட்டை

 * செம்மங்குடி

 * திருமுல்லைவாசல் 

 மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளும் வகையில் இந்தத் தகவல் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது 

மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், அன்றையதினம் மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டது என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்தம் போது மேற்கொள்ளப்படும் பணிகள் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Embed widget