மேலும் அறிய

சீர்காழியில் கொந்தளிப்பு! பேருந்து நிறுத்த பயணிகள் கட்டிடத்தை மதுக்கூடமாக மாற்றிய அவலம்: பெண்கள், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!

சீர்காழி அருகே பேருந்து நிலையத்தையே மதுக்கூடமாக மாற்றி, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பேருந்து நிலையத்தையே மதுக்கூடமாக மாற்றி, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி - பணங்காட்டங்குடி சாலையில் மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அச்சத்தில் மாணவிகளும் பொதுமக்களும்

சீர்காழி வட்டத்தில் பணங்காட்டங்குடி செல்லும் பிரதான சாலையில் 'ஊமை மதகு' பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையமானது அரூர், ஆலஞ்சேரி, ஏலக்குடி, மன்னங்கோயில், தத்தங்குடி மற்றும் ஐவேலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் இந்தப் பேருந்து நிலையத்தையே சார்ந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, இந்தப் பேருந்து நிலையத்தின் அருகாமையில் உள்ள ஒரு கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது. அரசு நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி, எந்நேரமும் மதுபானங்கள் தாராளமாகக் கிடைப்பதால், மதுப்பிரியர்கள் பேருந்து நிலையத்தையே தங்களின் மதுக்கூடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

மறியல் போராட்டத்திற்கான காரணம்

பேருந்து நிறுத்தத்தில் மது அருந்துபவர்களின் அத்துமீறல்களால் பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த அச்சத்துடனேயே அந்த இடத்தைக் கடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கள்ளச் சந்தை மது விற்பனையால் அப்பகுதியின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடத் துணிந்தனர்.

முழக்கமிட்ட போராட்டக்காரர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு எதிர்ப்பை பதிவு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், "பொதுமக்களுக்கான பேருந்து நிறுத்தத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து மது விற்பனை கூடமாக மாற்றியுள்ளனர். ஐந்து கிராமங்களின் எதிர்காலமான மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. காவல்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தெரிந்தே இந்த அத்துமீறல்கள் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உடனடியாக இந்தக் கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்," என எச்சரித்தார்.

இந்த மறியலில் அரூர், ஆலஞ்சேரி, ஏனாக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் திரளாகப் பங்கேற்று, "சட்டவிரோத மது விற்பனையை ஒழி!", "பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்!" என விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், சீர்காழி - பணங்காட்டங்குடி சாலையில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது.

அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தை

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) அண்ணாதுரை, வட்டாட்சியர் (Tahsildar) அருள்ஜோதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் தங்களின் குமுறல்களை அதிகாரிகளிடம் நேரிடையாக முன்வைத்தனர். "பேருந்து நிலையத்திலேயே மது விற்பனை நடப்பது மிகப்பெரிய அவமானம். எந்நேரமும் மது அருந்துபவர்களின் தொல்லையால் எங்களால் நிம்மதியாகப் பேருந்து ஏற முடிவதில்லை," எனப் பெண்கள் வேதனையோடு தெரிவித்தனர்.

நிர்வாகத்தின் உறுதிமொழி

மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், "அடுத்த 10 தினங்களுக்குள் இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவல்துறை ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும்," என உறுதி அளித்தனர்.

அதிகாரிகளின் இந்த எழுத்துப்பூர்வமான உறுதியைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர். எனினும், 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget