மேலும் அறிய

கண்ணீருடன் பிரியா விடை! வெளியேறும் இறுதி நேரத்திலாவது துயர் துடைக்குமா அரசு: எதிர்பார்ப்பில் மாஞ்சோலை மக்கள்.!

எங்களின் துயர் துடைக்க இறுதி நேரத்திலாவது அரசின் அறிவிப்பு வருமா? முதல்வரின் குரல் எங்களுக்காக ஒலிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கூறுகின்றனர் மாஞ்சோலை மக்கள்...!

1963 ஆம் ஆண்டு  சிவாஜி கணேசன் சாவித்திரி நடித்த பஞ்ச அருணாச்சலம் தயாரிப்பில் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான இரத்த திலகம் படத்தில் இடம் பெற்றுள்ள பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே  என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். கல்லூரி தோழர்களான சிவாஜியும், சாவித்திரியும் கல்லூரி காலம் முடியும் நேரத்தில் இந்த பாடலை பாடிப் பிரிந்து செல்வர். 

இந்த நிலையில் ஐந்து தலைமுறைகளாக 95 ஆண்டுகள் மாஞ்சோலை மலை கிராமத்தில்  வசித்து வரும்  561 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர். பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனத்தின் விருப்ப ஓய்விற்கு அனைவரும் கையெழுத்திட்ட  நிலையில் அவர்களுக்கு கிராஜுவெட்டி தொகையின் 25% காசோலையாக  வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அடுத்த 45 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்து செல்லும்போது மீதமுள்ள 75 சதவீதம் வழங்கப்படும் என தேயிலை  தோட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே நிறுவனம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை நேற்றோடு  நிறுத்தியுள்ளது.


கண்ணீருடன் பிரியா விடை! வெளியேறும் இறுதி நேரத்திலாவது துயர் துடைக்குமா அரசு: எதிர்பார்ப்பில் மாஞ்சோலை மக்கள்.!

இதனால் அப்பகுதி மக்கள் மாஞ்சோலையில் ஒன்று கூடி தங்களது பல ஆண்டு கால  பழைய  சம்பவங்களை நினைவு கூர்ந்ததோடு பசுமை நிறைந்த நினைவுகளே பாடலை தழுதழுத்த குரலில்  பாடி பிரியா விடை கொடுப்பதற்கான  ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். மூன்றாண்டுகள் கல்லூரியில் ஒன்றாக படித்து விட்டு பிரிந்து செல்லும் நண்பர்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தும் என்ற நிலையில் பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து விட்டு அங்கிருந்து மறுகுடி அமர்விற்கு வேறு பகுதிக்கு செல்லும் மக்களின் நிலையை  நினைத்துப் பார்க்கவே கண்ணில் நீர் கோர்க்கிறது. 

 


கண்ணீருடன் பிரியா விடை! வெளியேறும் இறுதி நேரத்திலாவது துயர் துடைக்குமா அரசு: எதிர்பார்ப்பில் மாஞ்சோலை மக்கள்.!

அனைவரும் ஒரே இடத்தில் கூடி ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பறிமாறிக்கொண்டதுடன் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி கண்ணீர் விட்டு அழுது புலம்பிய காட்சிகள் அனைவரது மனதையும் கலங்கச் செய்தது. மக்களை பிரியும் அம்மண்ணும், தேயிலை தோட்டங்களும் கூட அவர்களின் பிரிவை நினைத்து கண்ணீர் வடிக்கும். அந்த அளவிற்கு அப்பகுதி வாழ்வியலோடு ஒன்றி பிணைந்த மக்கள் தான் பிறந்த மண்ணை விட்டு பிரிய மனமில்லாமால் பிரிந்து செல்லும் இறுதி காட்சிகள் வார்த்தைகளே இல்லாத வலியை மட்டுமே தாங்கி செல்வதை எடுத்துரைக்கிறது. அரசே எடுத்து நடத்தி மாஞ்சோலை மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வந்தனர். கண்ணீரும், கவலையுமாக இருக்கும் மாஞ்சோலை மக்களின் துயர் துடைக்க இறுதி நேரத்திலாவது அரசின் அறிவிப்பு வருமா? முதல்வரின் குரல் எங்களுக்காக ஒலிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கூறுகின்றனர் அங்குள்ள தோட்ட தொழிலாளர்கள்...!

தலைப்பு செய்திகள்

வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான் என்ன? கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
வீழ்ச்சியில் சர்க்கரை உற்பத்தி! அரசு போடப்போகும் மாஸ் பிளான்! கரும்பு விவசாயிகளுக்கு செம நியூஸ்!
சென்னை, செங்கல்பட்டு வாசிகளே கவனத்திற்கு! இன்று இரவு வரை மழை? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை, செங்கல்பட்டு வாசிகளே கவனத்திற்கு! இன்று இரவு வரை மழை? வானிலை மையம் சொல்வது என்ன?
சாதிப் பாகுபாடு இல்லையா? உங்க பஞ்சாயத்துக்கு ₹1 கோடி தரும் தமிழக அரசு! எப்படி விண்ணப்பிப்பது?
சாதிப் பாகுபாடு இல்லையா? உங்க பஞ்சாயத்துக்கு ₹1 கோடி தரும் தமிழக அரசு! எப்படி விண்ணப்பிப்பது?
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!
புது பைக் வாங்குபவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய உண்மை! நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Embed widget