மேலும் அறிய

LTTE Daya Mohan: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? விடுதலைப்புலிகள் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் விளக்கம்..!

LTTE Daya Mohan: பழ நெடுமாறனின் கருத்து, ஆயுத போராட்டத்தை கைவிட்டு இலங்கையில் உள்ள போராளிகளுக்கு இடையூறு விளைவிக்க வாய்ப்புள்ளது என எல்.டி.டி.இ. ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தவர்கள்தான் நிதி வசூலில் ஈடுபட்டதாக தயா மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளரான தயா மோகன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

தலைவர் பிரபாகரனின் வீரமரணத்தை உலகிற்கு தெரிவித்தோம். விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் கருத்து, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது, உலக நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கான முன்னெடுப்பை ஏற்படுத்தி வருகிறோம். இந்நிலையில், இதுபோன்ற கருத்து தடையை நீட்டிக்க வைப்பதற்கான முயற்சியே.  பிரபாகரன் மரணத்தின் மீதான அறிவிப்பை தடுத்த இவர்கள்தான் உயிரோடு இருப்பதாக அறிவிக்கிறார்கள். இப்பொழுது, உயிரோடு இருப்பதாக அறிவிப்பதற்கான காரணம் என்ன ? பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறனை நம்ப வைத்தவர்கள்தான் நிதி வசூலில் ஈடுபட்டனர்.

பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற அறிவிப்பால், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சிறிய அரசியல் தீர்வு கூட, கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். விடுதலை மீதான தடையை, இலங்கை அரசு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. ஆயுத போராட்டங்களை விட்டுவிட்டு, இலங்கையில் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பழ. நெடுமாறன் ஆபத்தை உணராமல் பேசுகிறார். வைகோ, ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் ஆபத்தை உணர்ந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளரான தயா மோகன் தெரிவித்தார்.

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு மன்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் ”பழ. நெடுமாறன்” நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஐயம் இருக்கும். இந்த செய்தியில் தற்போது இது உறுதியாக இருக்கும் என்பதை நம்புகிறேன். தமிழீழம் பற்றி விரிவான திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். உலகத்தில் உள்ள அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.


LTTE Daya Mohan: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? விடுதலைப்புலிகள் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் விளக்கம்..!

இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படுகிறது இதனை தடுக்க முற்பட வேண்டும். பிரபாகரன்  குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன். எங்கே இருக்கிறார் எப்போது வருவார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார். அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். சர்வதேச சூழல் அன்று கை விரித்தது. ராஜபக்சேவை ஆட்சியில் அமர வைத்த அதே சிங்கள மக்கள் அவரை தற்போது நாட்டை விட்டு விரட்டி இருக்கிறார்கள். இதைவிட நல்ல சூழல் எதுவாக இருக்காது.

இந்த சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு ஆதரவாக  ஈழத் தமிழர்கள் இருப்பார்கள். இந்த செய்தி ஈழத் தமிழர்களுக்கு நன்மையும் கொடுக்கும். நம்பிக்கையும் கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
தமிழகத்தில் 2 நாட்கள் எங்கெல்லாம் கனமழை கொட்டும், சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 2 நாட்கள் எங்கெல்லாம் கனமழை கொட்டும், சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
காங்கிரஸால் தனியா ஒரு கவுன்சிலராவது ஜெயிக்க முடியுமா?- மாணிக்கம் தாக்கூரை விமர்சித்த அன்புமணி! பின்னணி என்ன?
காங்கிரஸால் தனியா ஒரு கவுன்சிலராவது ஜெயிக்க முடியுமா?- மாணிக்கம் தாக்கூரை விமர்சித்த அன்புமணி! பின்னணி என்ன?
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Embed widget