மேலும் அறிய

Election Commission: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு ; தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு!

வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவானது - தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க தேர்தல் ஆணையம் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க தேர்தல் ஆணையம் கூட்டத்தில் முடிவு

இந்தியாவில் நீண்ட காலமாகவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்குமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை நாம் நல திட்டங்கள் பெறுவது, வங்கி கணக்கு தொடங்குவது, சிம் கார்டுகள் வாங்குகள், பான் எண் பெறுவது , பாஸ்போர்ட் பெறுவது என பல செயல்களுக்கும் அடையாள ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம். ஆதாரை கட்டாயப்படுத்தி வாங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அனைத்து சேவைகளுக்கும் நாம் ஆதாரை வழங்கி கொண்டு தான் இருக்கிறோம்.
 
இதற்காகவே தனித்துவ அடையாள அமைப்பான UIDAI ஆதார் என்ற வசதியையும் ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த சூழலில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணைய தலைமையகத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி தலைமையில், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தான், வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவானது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், ஆதார் அடையாள அட்டை எண்ணும் விரைவில் இணைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியதாவது:

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 326வது பிரிவின் படி, இந்திய குடிமகனுக்கு ஓட்டளிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தகைய சூழலில், ஆதார் அடையாள அட்டை தான், அந்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, தேர்தல் கமிஷன் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆதார் அடையாள எண் ஆணையம், தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின் தக்க முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார். ஆனால் இந்த பணிகள் அதிகாரப்பூர்வமாக எப்போது தொடங்கும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன், பார்லிமென்டில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை எண்கள், பல மாநிலங்களில் ஒரே மாதிரியாக இருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே, நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் விரைவில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து தக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, 2015 பிப்ரவரியில், பல மாநிலங்களில் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்களை, ஆதார் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணி துவங்கியது. அப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் அடையாள அட்டையை, அரசுகளின் நலத்திட்டம் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN School Leave: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Embed widget