மேலும் அறிய

கரூரில் புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

கரூர் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்த இடத்தில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ததை தடை விதித்து பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட கோரிய வழக்கில், பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


கரூரில்  புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம், சனப்பிரட்டி பகுதியை சேர்ந்த குமரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதி இருந்து வந்தது. இதனால் கரூர் மாவட்டத்தில் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அங்கு சில பிரச்னையின் காரணமாக கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் கட்டுவதற்காக அரசாணை வெளியிடப்பட்ட இடத்தில் தற்போது இலங்கை அகதிகள் தங்குவதற்காக இடம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


கரூரில்  புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

எனவே, கரூர் தோரணக்கல்பட்டியில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தடை விதித்து பேருந்து நிலையம் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டமன்றத்தில் வெளிநாடு அகதிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் குடியிருப்புகள் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் "கரூர் மாவட்டத்தில் 225 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.


கரூரில்  புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

 

இதனையடுத்து நீதிபதிகள், வெளிநாடு அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் முகாம் ஒதுக்கீடு செய்வது சிறந்தது என கருத்து தெரிவித்து அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து கரூர் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 2 அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. குழப்பத்தை தவிர்க்க பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Embed widget