மேலும் அறிய

கரூரில் புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

கரூர் தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்த இடத்தில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ததை தடை விதித்து பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட கோரிய வழக்கில், பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


கரூரில் புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம், சனப்பிரட்டி பகுதியை சேர்ந்த குமரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் 40 பேருந்துகள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதி இருந்து வந்தது. இதனால் கரூர் மாவட்டத்தில் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அங்கு சில பிரச்னையின் காரணமாக கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் கட்டுவதற்காக அரசாணை வெளியிடப்பட்ட இடத்தில் தற்போது இலங்கை அகதிகள் தங்குவதற்காக இடம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணி தொடங்க உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


கரூரில் புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

எனவே, கரூர் தோரணக்கல்பட்டியில் இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு தடை விதித்து பேருந்து நிலையம் அமைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டமன்றத்தில் வெளிநாடு அகதிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் குடியிருப்புகள் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் "கரூர் மாவட்டத்தில் 225 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.


கரூரில் புதிய பேருந்து நிலையம் - புதிய அரசாணையை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

 

இதனையடுத்து நீதிபதிகள், வெளிநாடு அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் முகாம் ஒதுக்கீடு செய்வது சிறந்தது என கருத்து தெரிவித்து அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து கரூர் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 2 அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. குழப்பத்தை தவிர்க்க பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Linked PAN number with Aadhaar number? பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Embed widget