மேலும் அறிய

Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!

சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்  சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக பலியான நிகழ்வில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்  சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

என்னென்ன வழக்குகள்?

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக பலியான நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்றம் முன்மொழிந்த  சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதேபோல தவெக தலைவர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்குத் தடை விதிக்கவும் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.          

அதேபோல பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள், இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சரியா ஆகிய இருவரும் விசாரிக்கின்றனர். இதற்கான வாதங்கள் கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது.

2 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய மூவர் குழு

இதில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்  சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், 2 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

’’இந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு கேடர் அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. நியாயமான விசாரணை தேவை என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்’’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனி நீதிபதி மீறியுள்ளார்

தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தின் வரம்பை, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மீறியுள்ளார். மதுரை வரம்புக்குள் வரும் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

பிரச்சார நெறிமுறைகளை வகைப்படுத்தக் கோரிய வழக்கை கிரிமினல் ரிட் மனுவாக விசாரித்தது எப்படி என்று உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்

முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விசாரணையில், ’’கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கை, மதுரை உயர் நீதிமன்றத்துக்கு பதிலாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்? பிரச்சார நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவுக்கான உத்தரவு அமைக்கப்பட்டது எப்படி? கிரிமினல் வழக்காகக் கருதப்பட்டது ஏன்?’’ என்று உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.

தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் வாதிட்ட நிலையில், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget