மேலும் அறிய

30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் உதவி இன்றி, இளைஞர்கள் ஒன்று கூடி 15,000 லிட்டர் தண்ணீர் இருக்கும் வகையில் கிணற்றை தூர்வாரி உள்ளனர்.

கரூர் மாவட்ட எல்லையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 30 ஆண்டுகாலமாக பயனற்று இருந்த கிணற்றை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தூர்வாரினர். கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீரை எடுத்து சென்றதை

 

மகிழ்ச்சியுடன் தண்ணீரை எடுத்துச் சென்ற கிராம மக்கள் - ஊர் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

 

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  கிராமத்தின் மையப் பகுதியில் சுமார் 60 ஆண்டிற்கு முன்பாக குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

 

கடந்த 30 ஆண்டு காலமாக  கிணறு பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. குடிப்பதற்கு பஞ்சாயத்து குடிநீர் சரியாக வராததாலும், போர் பைப்பில் உப்பு தண்ணீர் வருவதால் அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஊர் பொதுமக்களுடன் இணைந்து கிணறை தூர்வார முடிவெடுத்தனர்.

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவெடுத்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 65 அடி ஆழமுள்ள கிணற்றில் 12 அடி தூர்வாரி கிணற்றுக்கு கம்பிகள் அமைத்து கயிறு உதவியுடன் வாளி மூலம் குடிநீர் எடுப்பதற்கான அமைப்பை செய்துள்ளனர். இதனை திருவிழாவாக கொண்டாடும் வகையில் கிணறு அருகே அமைந்துள்ள காளியம்மன் மற்றும் விநாயகர் கோவிலை சுத்தம் செய்து, பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

குறிப்பாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் உதவி இன்றி, இளைஞர்கள் ஒன்று கூடி 15,000 லிட்டர் தண்ணீர் இருக்கும் வகையில் கிணற்றை தூர்வாரி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புன்னகையுடன் கிணற்றில் தண்ணீர் எடுத்தனர். சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உற்சாகத்துடன் தண்ணீரை பருகினர்.

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதி மிகவும் வறட்சியான பகுதி தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதி, போர் பைப்பில் சரிவரத் தண்ணீர் வராததாலும் சுமார் 30 ஆண்டுக்கு மேலாக உறை கிணறு பயனற்று இருந்ததை குடிநீர் தேவைக்காக பயன்படுத்தலாம் என்று ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முடிவெடுத்து கிராம மக்களிடம் நிதி வசூல் செய்து 12 அடிக்கும் மேல் இருந்த மண்களை தூர்வாரி எடுத்து குடிநீர் பயன்பாட்டிற்காக கொண்டு வந்துள்ளோம். நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது. ஊரின் வளர்ச்சியை முடிந்த அளவிற்கு இந்த கிணற்று தண்ணீர் தீர்க்கும் நம்பிக்கை உள்ளது.  அரசு தாமாக முன்வந்து கிராம பகுதியில் குடிநீர் தேவைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Udumalpet Power Cut (5-01-2026): உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Embed widget