கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 89 ஆயிரத்து, 44 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து, 90 ஆயிரம் கன அடியை தாண்டியது. தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளுக்கு கடந்த மே, 24 இல் குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3,000 கன அடி முதல் அதிகபட்சமாக, 1.20 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால், 1.60 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும், பவானிசாகர், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், காவிரி ஆற்றில் சேர்ந்து மாயனூர் கதவனுக்கு வந்து சேர்கிறது. இதனால், 10 மணி நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 90 ஆயிரத்து, 164 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 89 ஆயிரத்து, 44 கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,280 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,758 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் அருகே, பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு 2,064 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 273 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 88.46 அடியாக இருந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.86 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, 6 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.94 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 90 ஆயிரம் கன அடியை தாண்டியுள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
ட்ரெண்டிங் செய்திகள்






















