மேலும் அறிய

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு என வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் தமிழ்நாட்டின் பசுமை வனப்பரப்பு மொத்த பரப்பரப்பில் கிட்டத்தட்ட 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தேசிய வனக் கொள்கையின் படி பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும், எனவே, தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்து 10 ஆண்டுகளில் 34 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தை அரசு கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  

இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படுவதோடு பசுமைப் பரப்பு அதிகரிப்பு, மண்ணின் அங்கக உயிர் பொருள் அதிகரிப்பின் மூலம் மண்வளம் மேம்பாடு மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள் உற்பத்தி மற்றும் உலக வெப்பமயமாதலில் ஏற்படும் தீய விளைவுகள் குறையும். இந்த திட்டத்தில், செம்மரம், மாக்கோகனி, ரோஸ்வுட், தேக்கு,  வேங்கை,  மலைவேம்பு ,புளியன்,  கடம்பு உட்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை நாற்றங்களில் உற்பத்தி செய்து, வேளாண் உழவர் நலத்துறையின் மூலம் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் ஹெக்ட்டா இருக்கு 160 மரக்கன்றுகளும் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால்  ஹெக்டேருக்கு 500 மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மரக்கன்று வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார் பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்கம்  நாற்றங்காலில் இருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம். 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
ஒரே நாளில் தீக்கிரையான 6.5 டன் கஞ்சா! செங்கல்பட்டில் பரபரப்பு... நேரலையில் கவனித்த முதலமைச்சர்!
ஒரே நாளில் தீக்கிரையான 6.5 டன் கஞ்சா! செங்கல்பட்டில் பரபரப்பு... நேரலையில் கவனித்த முதலமைச்சர்!
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget