மேலும் அறிய

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு என வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் தமிழ்நாட்டின் பசுமை வனப்பரப்பு மொத்த பரப்பரப்பில் கிட்டத்தட்ட 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தேசிய வனக் கொள்கையின் படி பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும், எனவே, தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்து 10 ஆண்டுகளில் 34 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தை அரசு கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  

இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படுவதோடு பசுமைப் பரப்பு அதிகரிப்பு, மண்ணின் அங்கக உயிர் பொருள் அதிகரிப்பின் மூலம் மண்வளம் மேம்பாடு மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள் உற்பத்தி மற்றும் உலக வெப்பமயமாதலில் ஏற்படும் தீய விளைவுகள் குறையும். இந்த திட்டத்தில், செம்மரம், மாக்கோகனி, ரோஸ்வுட், தேக்கு,  வேங்கை,  மலைவேம்பு ,புளியன்,  கடம்பு உட்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை நாற்றங்களில் உற்பத்தி செய்து, வேளாண் உழவர் நலத்துறையின் மூலம் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் ஹெக்ட்டா இருக்கு 160 மரக்கன்றுகளும் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால்  ஹெக்டேருக்கு 500 மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மரக்கன்று வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார் பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்கம்  நாற்றங்காலில் இருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம். 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
Broiler Chicken: அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?
"என்னை திருடன்னு சொல்றாங்க... மன்னிப்பு கேக்குற வரை வரமாட்டேன்" - அதிமுக கூட்டத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் - நடந்தது என்ன?
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Embed widget