மேலும் அறிய

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு என வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் தமிழ்நாட்டின் பசுமை வனப்பரப்பு மொத்த பரப்பரப்பில் கிட்டத்தட்ட 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தேசிய வனக் கொள்கையின் படி பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும், எனவே, தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்து 10 ஆண்டுகளில் 34 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தை அரசு கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  

இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படுவதோடு பசுமைப் பரப்பு அதிகரிப்பு, மண்ணின் அங்கக உயிர் பொருள் அதிகரிப்பின் மூலம் மண்வளம் மேம்பாடு மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள் உற்பத்தி மற்றும் உலக வெப்பமயமாதலில் ஏற்படும் தீய விளைவுகள் குறையும். இந்த திட்டத்தில், செம்மரம், மாக்கோகனி, ரோஸ்வுட், தேக்கு,  வேங்கை,  மலைவேம்பு ,புளியன்,  கடம்பு உட்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை நாற்றங்களில் உற்பத்தி செய்து, வேளாண் உழவர் நலத்துறையின் மூலம் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் ஹெக்ட்டா இருக்கு 160 மரக்கன்றுகளும் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால்  ஹெக்டேருக்கு 500 மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மரக்கன்று வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார் பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்கம்  நாற்றங்காலில் இருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம். 


கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
Embed widget