மேலும் அறிய

கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கரூர் மாவட்டத்தில் 26 கிராமங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினர்கள் மற்றும் பிறத்துறைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் வர உள்ளதால் காவேரி கரையோரங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க இன்று  தவிட்டுப்பாளையம் பகுதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் இன்று காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் வர உள்ளதால் காவேரி கரையோரகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் அம்மா பூங்கா ஆகியப் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கன அடிக்கு நீர் திறந்து விடுவதால், கரூர் மாவட்டத்தில் காவிரிக்கரையோரகளில் ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். எனவே இந்த கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்புகள் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். கரூர் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் 26 கிராமங்கள் நதிகளை ஒட்டி அமைந்திருக்கின்றன. அந்த 26 கிராமங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினர்கள் மற்றும் பிறத்துறைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

எந்தவிதமான அசம்பாவிதம் நடக்காத வண்ணம் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடானப் பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தவிட்டுப்பாளையத்தில் 150 குடும்பத்திற்கு மேல் தங்க வைப்பதற்கு உடனடியாக அருகில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணை தற்சமயம் 1.60 இலட்சம் கனஅடிஅளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 லட்சம் கனஅடிஅளவிற்கு தண்ணீரும் வெளியிடப்படும். தொடர்ந்து இந்த நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் முழு அளவில் இந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆற்றுப்பகுதிகளுக்கு எந்தவித காரணத்திற்காகவும் செல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தொடர்ந்து இந்த வெள்ள அபாய எச்சரிக்கை தொடரும் வரை ஆற்றிற்கு குளிக்கவோ, துணி துவைப்பதற்கோ, நீந்துவதற்கோ அல்லது வேறு எந்த ஒரு காரணத்திற்காகவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர்  தெரிவித்தார்கள். இவ்ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வருவாய் கோட்டாட்சியர்கள் புஷ்பாதேவி (குளித்தலை), ரூபினா (கரூர்), தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MEMU Special Trains: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரயில்கள்! பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரயில்கள்! பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு
Chennai Mini Bus : சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
பறவைகளின் சொர்க்கமாகும் மரக்காணம்: ரூ.50 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம்!
பறவைகளின் சொர்க்கமாகும் மரக்காணம்: ரூ.50 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம்!
EPS ADMK: ’திமுக ஆட்சி முடியப்போகிறது’ ஸ்டாலின் சைகை பற்றி EPS அட்டாக்..!
’திமுக ஆட்சி முடியப்போகிறது’ ஸ்டாலின் சைகை பற்றி EPS அட்டாக்..!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Chennai Mini Bus : சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Embed widget