மேலும் அறிய

கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கரூர் மாவட்டத்தில் 26 கிராமங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினர்கள் மற்றும் பிறத்துறைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் வர உள்ளதால் காவேரி கரையோரங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க இன்று  தவிட்டுப்பாளையம் பகுதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் இன்று காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் வர உள்ளதால் காவேரி கரையோரகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் அம்மா பூங்கா ஆகியப் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கன அடிக்கு நீர் திறந்து விடுவதால், கரூர் மாவட்டத்தில் காவிரிக்கரையோரகளில் ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். எனவே இந்த கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்புகள் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். கரூர் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் 26 கிராமங்கள் நதிகளை ஒட்டி அமைந்திருக்கின்றன. அந்த 26 கிராமங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினர்கள் மற்றும் பிறத்துறைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

எந்தவிதமான அசம்பாவிதம் நடக்காத வண்ணம் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடானப் பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தவிட்டுப்பாளையத்தில் 150 குடும்பத்திற்கு மேல் தங்க வைப்பதற்கு உடனடியாக அருகில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணை தற்சமயம் 1.60 இலட்சம் கனஅடிஅளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 லட்சம் கனஅடிஅளவிற்கு தண்ணீரும் வெளியிடப்படும். தொடர்ந்து இந்த நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் முழு அளவில் இந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆற்றுப்பகுதிகளுக்கு எந்தவித காரணத்திற்காகவும் செல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தொடர்ந்து இந்த வெள்ள அபாய எச்சரிக்கை தொடரும் வரை ஆற்றிற்கு குளிக்கவோ, துணி துவைப்பதற்கோ, நீந்துவதற்கோ அல்லது வேறு எந்த ஒரு காரணத்திற்காகவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர்  தெரிவித்தார்கள். இவ்ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வருவாய் கோட்டாட்சியர்கள் புஷ்பாதேவி (குளித்தலை), ரூபினா (கரூர்), தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
தமிழ்நாடு முழுவதும் வகுப்பு புறக்கனிப்பு போராட்டம்! நீட் தேர்வை எதிர்த்து மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் வகுப்பு புறக்கனிப்பு போராட்டம்! நீட் தேர்வை எதிர்த்து மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி
திருச்சி ஜி.ஹெச்-ல் பரபரப்பு... மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி: உறவினர்கள் அதிர்ச்சி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Embed widget