மேலும் அறிய

கரூர்: 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர் காவிரி ஆறு

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . காவிரி நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு மாயனூர் தயாராகி வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டு, மாயனூர் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூரில் நூற்றாண்டு சாதனை நோக்கி காவிரி மாயனூர் 

 


கரூர்: 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர் காவிரி ஆறு

 

மாயனூர் காவிரி ஆறு 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இயற்கையில் இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் காவிரி. தலை காவிரி உற்பத்தியாகி ஆங்காங்கே பாசன வாய்க்காலாக பிரிந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை விளைவிக்க செய்கிறது. விவசாயத்திற்கு மூல ஆதாரமாக காவிரி விளங்குகிறது. காவிரி இல்லை என்றால் விவசாயமே கேள்விக்குறியாகிவிடும். முன்பெல்லாம் பருவம் தவறாமல் ஆண்டுதோறும் மும்மாரி மழை பெய்து காவிரியில் தண்ணீர் வற்றாமல் சென்று கொண்டே இருக்கும். காவிரி நீருக்காக அண்டை மாநிலத்தை தமிழகம் எதிர்பார்க்கவில்லை.

குறுவை, சம்பா பருவத்திற்கு குறித்த காலத்தில் நமக்கு தண்ணீர் கிடைத்தது. அதை வைத்து முப்போகம் விவசாயம் பார்க்கப்பட்டது. தானிய உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றது. இயற்கையின் மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லாமல் தண்ணீருக்காக அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதிகப்படியான தண்ணீர் வரும்போது வெள்ள அபாயமாக அறிவித்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு பெருக்கெடுத்து செல்லும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்றதை அனைவரும் பார்த்திருப்போம். கடந்த ஆண்டுகளில் கூட காவிரியில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றதை பார்த்திருப்போம். ஆனால் 1924 ஆம் ஆண்டு சாதனையை காவிரியால் இன்னும் முறியடிக்க முடியவில்லை. இந்த சாதனை நடந்து 99 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு 100 ஆண்டு நிறைவடைய உள்ளது. காவிரி நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு மாயனூர் தயாராகி வருகிறது.

உச்சகட்ட சாதனை

 


கரூர்: 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர் காவிரி ஆறு

 

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டு, எத்தனை கன அடி தண்ணீர் சென்றது என்ற விவரம் மாயனூர் பழைய கட்டளை கதவணையில் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1924 ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதி மாயனூர் பழைய கட்டளை படுக்கை அணை வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 லட்சத்து 63 ஆயிரம் கன அடி தண்ணீர்  சென்றுள்ளது. 1961ம் ஆண்டு அதே ஜூலை மாதம் 7ம் தேதி 3 லட்சத்து 88 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 1977, 1979, 1980, 2022ம் ஆண்டு வரை காவிரியில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர்ச் சென்றுள்ளது. 1924 ஆம் ஆண்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுதான் உச்சகட்ட சாதனையாக இருந்துள்ளது.  அதன் பிறகு 4 லட்சத்திற்கு மேல் தண்ணீர் காவிரியில் சென்றதில்லை  என்கின்றனர் நீர் வளத்துறையினர்.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட, 1924ம் ஆண்டு சாதனையை எட்டிப் பிடிக்க முடியுமா? என்பது இயற்கையின் கையில்தான் உள்ளது. இந்த ஆண்டு வரை 1924 ஆம் ஆண்டுதான் உச்சகட்ட சாதனை. அடுத்த ஆண்டு 2024ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியோடு 100 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர், காவிரி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு.

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. கரூர் மாவட்டம், கதவணைக்கு, முன்தினம் வினாடிக்கு, 11 ஆயிரத்து, 886 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 11 ஆயிரத்து 829 கன அடியாக குறைந்தது. அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 11, ஆயிரத்து, 329 கன அடியும், தென்கரை வாக்காலில், 500 கன அடியில் தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 551 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 63. 16 அடி ஆக இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 218 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

கரூர்: 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர் காவிரி ஆறு

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget