மேலும் அறிய

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூரில், அம்மா மருந்தகம் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டித்தந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்திருப்பதால் வருவாய் குறைப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த (2020) ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ், தற்பொழுது பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையில் அதிக அளவில் உயிர் சேதம் இன்றி சிறு பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது கொரோனா தொற்று அலையில் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு, தமிழ்நாடு அரசும் அதனை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும், மருத்துவர்களும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும் நாள்தோறும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு சில அத்தியாவசியத் தேவைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிர்காக்கும் சேவையாற்றி வரும் மருந்து கடைகளுக்கு 24 மணிநேரமும் இயங்க சிறப்பு அனுமதி அளித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. 


கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் காலை முதல் இரவு வரை பல்வேறு மருந்து கடைகளில் வரிசையாக நின்று தங்களுக்கும் , குடும்ப நண்பர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் அலையில் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த "அம்மா மருந்தகம்" தற்போது தங்கள் பணியை தொய்வுடனே நடத்தி வருகிறார்கள் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். குறிப்பாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் மாலை 6 மணியுடன், அம்மா மருந்தகத்தில் அடைத்து விடுகின்றனர். கரூர் மாவட்டத்தில் பல்வேறு மருந்துக்கடைகள் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், கரூரில் உள்ள அம்மா மருந்தகம் தற்போது உள்ள நிலையில் மிகுந்த மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

முன்னாள் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் ஒன்றான அம்மா மருந்தகம் பல்வேறு நிலைகளில் ஏழை ,எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கி வந்தன. 20% தள்ளுபடி விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு தகுந்தார் போல் விலையும், குறைவாக உள்ளதால் அதையே பொதுமக்கள் அம்மா மருந்தகத்தில் நாடி வருகின்றனர். கரூர் அம்மா மருந்தகம் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டித் தந்த நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து இருப்பதால் வருவாய் குறைப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள அம்மா மருந்தகம் தொடர்ந்து மக்கள் பணியை ஆற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 


கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

உயிர்காக்கும் உன்னத பணியில் உள்ள அம்மா மருந்தகம் ஏழை ,எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய பணியை மீண்டும் தொய்வின்றி, வார விடுமுறை இன்றி, மக்கள் பணியாற்ற வரவேண்டும் என்பதே மாவட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது.  பின்னர் இதுகுறித்து செங்குந்தபுரத்தில் இயங்கி வரும் கூட்டுறவு மொத்த பண்டக சாலையின் மேலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாம் கேட்டதற்கு, "தாங்கள் கூறுவது போல் அம்மா மருந்தகம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்பட்டது. அதற்கு அங்கு பணியாற்றி வந்த பணியாளர்கள் சிலருக்கு காய்ச்சல் வந்ததால், அம்மா மருந்து கடை அடக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மா மருந்தகம் கரூரில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் பணியாளர்களை கொண்டு அம்மா மருந்தகம் செயல்படும்” என விளக்கம் அளித்தார். பொதுமக்களின் நலனுக்காக தொடர்ச்சியாக அம்மா மருந்தகம் இனி விடுமுறை இன்றி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
மதுரை கால்நடை பாதுகாப்பு: இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!
மதுரை கால்நடை பாதுகாப்பு: இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!
மதுரை ரயில்வே கேட்டுகளில் கேமரா, சங்கேத முறை: விபத்துகளுக்கு இனி இடமில்லை!
மதுரை ரயில்வே கேட்டுகளில் கேமரா, சங்கேத முறை: விபத்துகளுக்கு இனி இடமில்லை!
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget