மேலும் அறிய

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூரில், அம்மா மருந்தகம் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டித்தந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்திருப்பதால் வருவாய் குறைப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த (2020) ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ், தற்பொழுது பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையில் அதிக அளவில் உயிர் சேதம் இன்றி சிறு பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது கொரோனா தொற்று அலையில் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு, தமிழ்நாடு அரசும் அதனை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசும், மருத்துவர்களும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும் நாள்தோறும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு சில அத்தியாவசியத் தேவைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிர்காக்கும் சேவையாற்றி வரும் மருந்து கடைகளுக்கு 24 மணிநேரமும் இயங்க சிறப்பு அனுமதி அளித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. 


கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் காலை முதல் இரவு வரை பல்வேறு மருந்து கடைகளில் வரிசையாக நின்று தங்களுக்கும் , குடும்ப நண்பர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் அலையில் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த "அம்மா மருந்தகம்" தற்போது தங்கள் பணியை தொய்வுடனே நடத்தி வருகிறார்கள் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். குறிப்பாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் மாலை 6 மணியுடன், அம்மா மருந்தகத்தில் அடைத்து விடுகின்றனர். கரூர் மாவட்டத்தில் பல்வேறு மருந்துக்கடைகள் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், கரூரில் உள்ள அம்மா மருந்தகம் தற்போது உள்ள நிலையில் மிகுந்த மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

முன்னாள் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் ஒன்றான அம்மா மருந்தகம் பல்வேறு நிலைகளில் ஏழை ,எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கி வந்தன. 20% தள்ளுபடி விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு தகுந்தார் போல் விலையும், குறைவாக உள்ளதால் அதையே பொதுமக்கள் அம்மா மருந்தகத்தில் நாடி வருகின்றனர். கரூர் அம்மா மருந்தகம் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டித் தந்த நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து இருப்பதால் வருவாய் குறைப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள அம்மா மருந்தகம் தொடர்ந்து மக்கள் பணியை ஆற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 


கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

உயிர்காக்கும் உன்னத பணியில் உள்ள அம்மா மருந்தகம் ஏழை ,எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய பணியை மீண்டும் தொய்வின்றி, வார விடுமுறை இன்றி, மக்கள் பணியாற்ற வரவேண்டும் என்பதே மாவட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது.  பின்னர் இதுகுறித்து செங்குந்தபுரத்தில் இயங்கி வரும் கூட்டுறவு மொத்த பண்டக சாலையின் மேலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாம் கேட்டதற்கு, "தாங்கள் கூறுவது போல் அம்மா மருந்தகம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்பட்டது. அதற்கு அங்கு பணியாற்றி வந்த பணியாளர்கள் சிலருக்கு காய்ச்சல் வந்ததால், அம்மா மருந்து கடை அடக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மா மருந்தகம் கரூரில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் பணியாளர்களை கொண்டு அம்மா மருந்தகம் செயல்படும்” என விளக்கம் அளித்தார். பொதுமக்களின் நலனுக்காக தொடர்ச்சியாக அம்மா மருந்தகம் இனி விடுமுறை இன்றி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
விஜய் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? - எம்பி சசிகாந்த் செந்தில் சொல்வது என்ன?
விஜய் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? - எம்பி சசிகாந்த் செந்தில் சொல்வது என்ன?
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!
சீனியர்கள் OUT, இளைஞர்கள் IN ரெடியாகும் திமுக 2.0 அதிரடி காட்டும் ஸ்டாலின்
கோட் சூட் அரசியல் TRENDSET செய்த விஜய் ஈர்க்கப்படும் இளைஞர்கள்!
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
CM Vijay: டெல்லிக்கு பறக்கும் முதல்வர் விஜய்; எப்போது? யாரையெல்லாம் சந்திக்கிறார்? இதோ விவரம்!
CM Vijay: டெல்லிக்கு பறக்கும் முதல்வர் விஜய்; எப்போது? யாரையெல்லாம் சந்திக்கிறார்? இதோ விவரம்!
Jai: விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்ததால் 2 படங்கள் கேன்சல் ஆகிடுச்சு.. உண்மையை உடைச்ச நடிகர் ஜெய்
Jai: விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்ததால் 2 படங்கள் கேன்சல் ஆகிடுச்சு.. உண்மையை உடைச்ச நடிகர் ஜெய்
திருமணத்திற்கு முன்பு எப்படி? திருமணத்திற்கு பின்பு எப்படி? ஜெயம் ரவியின் படங்களின் வெற்றி, தோல்வி சரித்திரம்!
திருமணத்திற்கு முன்பு எப்படி? திருமணத்திற்கு பின்பு எப்படி? ஜெயம் ரவியின் படங்களின் வெற்றி, தோல்வி சரித்திரம்!
Pawan Kalyan: ப்ளீஸ் விஜயோடு என்னை ஒப்பிடாதீங்க.. டார்ச்சர் செய்த ஆதரவாளர்கள்.. பவன் கல்யாண் கோரிக்கை!
Pawan Kalyan: ப்ளீஸ் விஜயோடு என்னை ஒப்பிடாதீங்க.. டார்ச்சர் செய்த ஆதரவாளர்கள்.. பவன் கல்யாண் கோரிக்கை!
TN Cabinet Minister: அமைச்சரவை விரிவாக்கம்..! பட்டியலை ஆளுநரிடம் சமர்பித்த சிஎம் விஜய், யாருக்கு எந்த இலாகா?
TN Cabinet Minister: அமைச்சரவை விரிவாக்கம்..! பட்டியலை ஆளுநரிடம் சமர்பித்த சிஎம் விஜய், யாருக்கு எந்த இலாகா?
Embed widget