தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கு எதிராக கொந்தளிப்பு! காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம்!
"காஞ்சிபுரத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது"

"மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கத்தினர் திடீரென ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் "
தொழிற்சங்கங்களின் கோரிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமாக நான்கு புதிய சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். பொது துறையை தனியார் மயம் ஆக்குவதை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஒப்பந்த முறையில் பணியில் பணியாளர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் . மோட்டார் தொழிலாளர்களை பாதிக்கும் BNS சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தும் செய்யப்படும் என அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய ரயில்வே நிலையம் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து திருமால்பூர் செல்லும் மின்சார ரயில் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, 500க்கும் மேற்பட்டோர் திடீரென ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை மேலும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது சுமார் 20 நிமிடங்கள் மேலாக ரயில் மறியல் ஆனது நடைபெற்றது பின்பு அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.























