மேலும் அறிய

Kanavu Illam Scheme: எஸ்.ரா., சு.வெ., வண்ணதாசன் உள்ளிட்ட 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு- தமிழக அரசு அதிரடி உத்தரவு

எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், வண்ணதாசன் உள்ளிட்ட பத்து தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ கனவு இல்லத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு வழங்கப்பட உள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், வண்ணதாசன் உள்ளிட்ட பத்து தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ கனவு இல்லத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ கருணாநிதியின்‌ 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ கடந்த 3.6.2021 அன்று, “தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த எழுத்தாளர்களில்‌ ஞானபீடம்‌, சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள்‌, மாநில இலக்கிய விருதுகள்‌, புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின்‌ விருதுகளைப்‌ பெற்றவர்களை ஊக்குளிக்கும்‌ வகையில்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ மாவட்டத்தில்‌ அல்லது விரும்பும்‌ மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22ஆம்‌ ஆண்டிற்கான கனவு இல்லத்‌ திட்டத்திற்கு, சாகித்ய அகாடமி விருது மற்றும்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற ந.செகதீசன்‌ என்கிற ஈரோடு தமிழன்பன்‌, சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர்‌ புவியரசு என்கிற சு.ஜகன்னாதன்‌, கலைஞர்‌ மு. கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற முனைவர்‌ இ. சுந்தரமூர்த்தி, சாகித்ய அகாதமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம்‌. கலைஞர்‌ மு. கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற முனைவர்‌ சூ. மோகனராசு, சாகித்ய அகாதமி விருது பெற்ற இமையம்‌ என்கிற வெ. அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்கள்‌ தேர்வு செய்யப்பட்டு. அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின்‌ அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை 3.6.2022 அன்று வழங்கினார்‌.

அதன்‌ தொடர்ச்சியாக, 2022-2023ஆம்‌ ஆண்டிற்கான கனவு இல்லம்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2005 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜி. திலகவதி, 2011 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற பொன்‌. கோதண்டராமன்‌. 2011 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்‌ சு. வெங்கடேசன்‌, 2013 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற ப. மருதநாயகம்‌, 2015 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற மறைமலை இலக்குவனார்‌, 2015-16 ஆம்‌ ஆண்டு செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்‌ தொல்காப்பியர்‌ விருது பெற்ற மருத்துவர்‌ முனைவர்‌ இரா. கலைக்கோவன்‌, 2018 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்‌. இராமகிருஷ்ணன்‌, 2016 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு. கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்றகா. ராஜன்‌, 2013 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆர்‌.என்‌.ஜோ.டீ. குருஸ்‌, 2016 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற  சி. கல்யாணசுந்தரம்‌ (வண்ணதாசன்‌) ஆகிய பத்து தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 16.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த பத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ மாவட்டத்தில்‌ அல்லது விரும்பும்‌ மாவட்டத்தில்‌ வீடுகள்‌ வழங்கப்படும்‌ என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Embed widget