மேலும் அறிய

நேரில் சந்தித்து நலம் விசாரித்த கமல்! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில், இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை முன்வைத்து திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன.

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: 

கடந்த 19ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 56 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

"மனநல மையங்களை உருவாக்க வேண்டும்"

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வரம்பை மீறியதையும் அவர்கள் கவனக்குறைவாக இருந்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

அவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் மனநல மையங்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசுக்கு எனது வேண்டுகோள். எப்போதாவது குடிக்கும் பழக்கம் இருக்கலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையிலாவது குடிக்க வேண்டும்.

ஆனால், சர்க்கரையாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி வரம்பை மீறுவது மோசமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா? திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
Breaking News LIVE: தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில் நடவடிக்கையா? திருச்சி சூர்யா கேள்வி
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Embed widget