![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
நள்ளிரவில் தூக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்கள்: விடிய விடிய குவிந்த அதிமுகவினர்!
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![நள்ளிரவில் தூக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்கள்: விடிய விடிய குவிந்த அதிமுகவினர்! In Sivakasi, police are investigating the two sons of former minister Rajendra Balaji's sister நள்ளிரவில் தூக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்கள்: விடிய விடிய குவிந்த அதிமுகவினர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/cb22a90e0f21f26b64ac0e72339d1eb8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்மீதான விசாரணையின்போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டு வழக்கு எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய காவல்துறை தீவிரம் காட்டிவருகிறது.
ஒரு தனிப்படை திருச்சி பகுதியிலும், மற்ற இரு படைகள் விருதுநகர் மாவட்டத்தின் உட்பகுதியிலும் தேடிவருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் மற்றும் ரமணன் கார் ஒட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும் நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர் இதுகுறித்து தகவலறிந்த வந்த சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மற்றும் அதிமுகவினர் திருத்தங்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது _ மேலும் தொடர் விசாரணைக்காக மூன்று பேரையும் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)