மேலும் அறிய

Mark Assessment: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள்‌ வழங்குதல்‌ தொடர்பான அறிவுரைகள்‌ மற்றும்‌ நெறிமுறைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளில்‌ மாணவர்களுக்கு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள்‌ வழங்குதல்‌ தொடர்பான அறிவுரைகள்‌ மற்றும்‌ நெறிமுறைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்‌ ஒதுக்கீடு (தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து) மொத்தம்‌ 10 மதிப்பெண்கள்‌

* மாணவர்கள்‌ வருகைப்‌ பதிவு : அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌

வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்கள்‌ வகுப்பாசிரியரால்‌ கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும்‌.

கல்வியாண்டில்‌ ஆரம்ப நாள்‌ முதல்‌ இவ்வியக்ககத்தால்‌ பின்னர் அறிவிக்கப்படும்‌ நாள்‌ வரை மாணவர்கள்‌ பள்ளிக்கு வருகை புரிந்த நாட்களின்‌ அடிப்படையில்‌, கீழ்க்கண்டவாறு வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்‌.

1. 80 சதவீதத்திற்கு மேல்‌ வருகை:‌ 2 மதிப்பெண்கள்‌
2. 75 சதவீதம்‌ முதல்‌ 80 சதவீதம்‌ வரை:‌ 1 மதிப்பெண்‌

அதாவது, 80.01% முதல்‌ 100% வரை- 2 மதிப்பெண்கள்‌
75% முதல்‌ 60% வரை- 1 மதிப்பெண்‌

(வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்கள்‌ அனைத்துப்‌ பாடங்களுக்கும்‌ பொதுவானது)

* உள்நிலைத்‌ தேர்வுகள்‌ : அதிகபட்சம்‌ 4 மதிப்பெண்கள்‌

(சிறந்த ஏதேனும்‌ மூன்று தேர்வுகளின்‌ சராசரி மதிப்பெண்ணை 4 மதிப்பெண்களுக்குக்‌ கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்‌;)

1. ஒவ்வொரு பாடத்திற்கும்‌ குறைந்த பட்சம்‌ 4 உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட வேண்டும்‌.

2. உள்நிலைத்‌ தேர்வுகள்‌ 40 முதல்‌ 45 நிமிடங்கள்‌ வரை நடைபெறும்‌ வகையில்‌, வகுப்பு நேரங்களிலோ அல்லது சிறப்பு வகுப்பு நேரங்களிலோ நடத்தப்பட வேண்டும்‌.

3. ஒவ்வொரு பாடத்திற்குமான உள்நிலைத்‌ தேர்வுகள்‌ சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களால்‌ நடத்தப்பட வேண்டும்‌.

4. உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌ தேதி பற்றிய விவரத்தினை மாணவர்களுக்கு குறைந்த பட்சம்‌ இரு நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பாட ஆசிரியா்‌ அறிவிக்க வேண்டும்‌.

5. குறிப்பிட்ட ஒரு பாடத்தின்‌ உள்நிலைத்‌ தேர்வுக்கும்‌, அதே பாடத்தின்‌ அடுத்த உள்நிலைத்‌ தேர்விற்கும்‌ இடையில்‌ குறைந்த பட்சம்‌ 10 நாட்கள்‌ இடைவெளி இருக்க வேண்டும்‌. இரு வெவ்வேறு பாடங்களுக்கு இடையில்‌ இந்த இடைவெளி இருக்க வேண்டிய அவசியமில்லை.

6. 25 மதிப்பெண்களுக்கு உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட வேண்டும்‌. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியராலேயே வினாத்தாள்‌ வடிவமைக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட வேண்டும்‌. வினாத்தாள்‌ மற்றும்‌ விடைத்தாட்களை கோப்பில்‌ வைத்திருக்கவேண்டும்‌.

7. உள்நிலைத்‌ தேர்வுக்கான மதிப்பெண்‌ விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவித்து, விடைத்தாட்களில்‌ அவர்களது
கையொப்பத்தினை பெற வேண்டும்‌.

8. உயிரியல்‌ பாடத்தில்‌, தாவரவியல்‌ மற்றும்‌ விலங்கியல்‌ ஆகிய இரு பாடங்களுக்கும்‌ சேர்த்து குறைந்த பட்சம்‌ நான்கு உள்நிலைத்‌ தோவுகள்‌ நடத்தப்படவேண்டும்‌.

9. உள்நிலைத்‌ தோ்வுகள்‌ தொடர்பான கீழ்க்கண்ட படிவங்கள்‌ அடங்கிய பதிவேடு சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரால்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌.


Mark Assessment: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

*  ஒப்படைவு / செயல்‌ திட்டம்‌ / களப்பயணம்‌ : அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌

(மூன்றில்‌ ஏதேனும்‌ ஒன்று - உரிய பதிவேடுகள்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌)

பாடங்களுக்கேற்றவாறு ஒப்படைவு (Assignment) அல்லது செயல்‌ திட்டம்‌ (Project) அல்லது களப்பயண அறிக்கை (Field Visit Report) 

இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள்‌ தேர்வு செய்து கொள்ளலாம்‌. ஆனால, மேற்குறிப்பிட்ட மூன்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை மட்டுமே ஒரு வகுப்பில்‌ உள்ள அனைத்து மாணவர்களுக்கும்‌ ஒரே சீராக ஒதுக்கீடு செய்தல்‌ வேண்டும்‌.

ஒவ்வொரு பாடத்திற்குமான மதிப்பெண்களை கீழ்க்காணும்‌ படிவத்தில்‌ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களால்‌ பராமரிக்கப்பட மவண்டும்‌.

* கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌: அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌

அரசாணை (2டி) எண்‌.13, பள்ளிக்‌ கல்வித்‌ துறை, நாள்‌.20.02.2018-ல்‌ தெரிவித்துள்ளவாறு, கீழ்க்குறிப்பிட்ட 33 செயல்பாடுகளுள்‌, குறைந்தபட்சம்‌ ஏதேனும்‌ மூன்று செயல்பாடுகளில்‌ பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு அதிக பட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌ அக மதிப்பீடாக வழங்கப்பட வேண்டும்‌.


Mark Assessment: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு எப்படி? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget