மேலும் அறிய

Armstrong Case to CBI: சிபிஐ-க்கு மாற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை - ஆம்ஸ்ட்ராங் சகோதரர் வழக்கு

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி, தனது வீட்டின் அருகே கூலிப்படையால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கை செம்பியம் காவல்துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை எனவும், அதனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்த போது, காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக கூறியதாகவும், காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், இது அரசியல் கொலை இல்லை என்றும், இந்த வழக்கின் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.

அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் - மனுதாரர் தரப்பு

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர  அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடட்ம விசாரணை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டதாகவும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

காவல்துறை மீது நீதிபதி அதிருப்தி

இதையடுத்து, கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில், கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என காவல்துறை தரப்பிடம் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இன்றைய விசாரணையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிபதி அதிரடி

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கிற்கான உத்தரவை பிறப்பித்தார்.

அப்போது, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறேன். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, சிபிஐ வசம் உடனே ஒப்படைக்க வேண்டும்“ என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து, 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து, குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

 

தலைப்பு செய்திகள்

Villupuram: 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கிராமம்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?
Villupuram: 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கிராமம்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
மதுரை பைக் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: மின் கசிவால் லட்சக்கணக்கான வாகனங்கள் நாசம்!
மதுரை பைக் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: மின் கசிவால் லட்சக்கணக்கான வாகனங்கள் நாசம்!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Embed widget